திருப்பூர், நவ. 30 - திருப்பூரில் போதைப் பழக்கம் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது. பல்வேறு விதமான போதை பொருட்களை அவர் கள் பயன்படுத்துகின்றனர். இதில் பிரச வம் மற்றும் அறுவை சிகிச்சை நேரங் களில் பயன்படுத்தப்படும் வலி நிவா ரண மருந்துகளையும் போதைக்காக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந் நிலையில் மருத்துவர்களின் பரிந் துரை சீட்டு இன்றி இந்த மாத்திரை கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் திருப் பூரில் மருந்தகங்களில் மருந்து கட்டுப் பாட்டு ஆய்வாளர்கள் தலைமையி லான குழுவினர் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக, கடந்த திங்களன்று இரவு திருப்பூர் எஸ்.வி.காலனி பகுதியில் மருந்துக்கடை உரிமையாளர் ஒருவரை இரண்டு இளைஞர்கள் போதை மாத் திரை கேட்டு தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புதன்கிழமை மருந்து கட்டுப்பாட்டு ஆய் வாளர் தலைமையிலான குழுவினர் மற் றும் திருப்பூர் வடக்கு போலீசார் திருப் பூர் ராம்நகர், பெருமாநல்லூர் சாலை, கொங்கு மெயின் ரோடு மற்றும் எஸ்.வி. காலனி, சாமுண்டிபுரம், கேத்தம்பாளை யம் ஆகிய பகுதியில் உள்ள தனியார் மருந்துக் கடைகளில் ஆய்வு மேற் கொண்டனர். இங்கு வலி நிவாரண மருந்து, மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரை இன்றி கொடுக்கப்பட்டதா எனவும், வலி நிவாரண மாத்திரை களை இளைஞர்கள் அதிகம் வாங்கி செல்கின்றனரா என கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்த னர். திருப்பூர் மாநகரில் ஏற்கனவே பஞ் சர் ஒட்ட பயன்படுத்தப்படும் ஒட்டு திர வத்தை சிறுவர்கள் வாங்கி போதைக் காக பயன்படுத்துவதாகவும் புகார்கள் உள்ளன. போதை பொருட்கள் விற் பனை தொடர்பான பிரச்சனையில் அரசு, மாவட்ட நிர்வாகம் பன்முகமான கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கை களை அனைத்து துறைகளையும் ஒருங் கிணைத்து மேற்கொள்ள வேண்டும் என்று இளைஞர் அமைப்புகள் வலியு றுத்தி உள்ளனர்.