districts

img

சேகோ சர்வ் மூலம் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திடுக

சேலம், ஜன.2- சேகோ சர்வ் மூலம் மட்டும் தான், ஜவ்வரிசி உள்ளிட்ட உற் பத்திப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும், என வலியு றுத்தி சிஐடியு சுமைப்பணித் தொழி லாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, திருவண்ணாமலை, விழுப் புரம், பெரம்பலூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மர வள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது. இதன் மூலம் தயாரிக்கப்படும் ஜவ் வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை  கிடைத்திடவும், இடைத்தரகர்க ளின் சுரண்டலை தடுத்திடவும், கலப் படம் இல்லாமல் சந்தை வாய்ப் பினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 1981 ஆம் ஆண்டு சேகோ சர்வ் நிறு வனம் துவங்கப்பட்டது. இந்நிறுவ னத்திற்கு கொண்டு வரும் மூட்டை களை இறக்கி குடோனில் அடுக்க வும், லாரியில் ஏற்றவும் என 200க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரு கிறார்கள். மேலும், சேகோ சர்வ்  மூலம் மூட்டைகளை வாங்கி வியா பாரம் செய்யும் வியாபாரிகள் குடோன்களில் 300க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இந்நிலை யில், சேகோ சர்வ் நிறுவனம் வழி காட்டுதலுக்கு மாறாக, உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிருந்தே நேரடியாக விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். இதனால் மீண் டும் கலப்படம், இடைத்தரகர்கள் வரி ஏய்ப்பு என தொடர்ந்து நடை பெற்று வருவதாக, சிஐடியு குற்றஞ் சாட்டியுள்ளது. சேகோ சர்வ் நிறுவனத்தின் ஆண்டு மொத்த விற்பனை ஆயிரம் கோடி வரை உயர்ந்துள்ளது என வும், சில ஆண்டுகளிலேயே மீண் டும் நேரடியாக வெளிச்சத்தை விற் பனை என்பது துவங்கி படிப்படி யாக கிட்டத்தட்ட நேரடி விற்பனை  என்ற நிலை நீடித்து வருகிறது.  எனவே, சேகோ சர்வ் மூலமாக  மட்டும் தான் உற்பத்தி பொருட் களை விற்பனை செய்ய வேண்டும், என வலியுறுத்தி சிஐடியு சேலம் ஜில்லா சுமைதூக்கும் தொழிலா ளர் சங்கம் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத் திலுள்ள சேகோ சர்வ் நிறுவனம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சுமைப்பணித் தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் ஏ.கோவிந்தன் தலைமை வகித் தார். இதில் மாநிலத் தலைவர் ஆர். வெங்கடபதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.உதயகுமார், சுமைப் பணித் தொழிலாளர் சங்க தலைவர் ஆறுமுகம், துணைச்செயலாளர் பிரபு, நிர்வாகிகள் தண்டபாணி, கோவிந்தராஜ், அன்பு, கணேசன், குமார் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.