districts

img

வாலிபர் சங்க நிர்வாகிகள் தேர்வு

ஈரோடு, ஜுலை 31- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஈரோடு நகர  மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. எஸ்.ஸ்டாலின் தலைமை  வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.சசி தொடக்கவுரையாற்றி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் பி.சுந்தரராஜன் வாழ்த்தி பேசினார். வாலிபர் சங்க மாவட்ட தலைவர் வி.ஏ.விஸ்வநாதன் நிறைவுரையாற்றினார். ஈரோடு நகரக்குழுவின் தலைவராக எஸ்.ஸ்டாலின், செயலாளராக எம்.கார்த்திகேயன், பொருளாளராக எஸ்.கவின் உள்ளிட்ட 15  பேர் கொண்ட நகரக்குழு தேர்வு செய்யப்பட்டது. கொடுமுடி-மொடக்குறிச்சி வாலிபர் சங்கத்தின் கொடுமுடி-மொடக்குறிச்சி ஒன்றி யங்களின் அமைப்புக்குழு கூட்டம் சிவகிரியில் நடைபெற்றது. எம்.லோகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.சசி சிறப்புரையாற்றினார். உழைக்கும் மக்கள் சங்க தலை வர் முருகேசன் வாழ்த்தி பேசினார். இதில் 9 பேர் கொண்ட  அமைப்புக்குழுவும், அமைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பா ளராக எம்.லோகநாதன் தேர்வு செய்யப்பட்டார்.