சேலம், பிப்.16- சங்ககிரியில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.8.50 லட்சம் மதிப்பிலான பட்டு சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி உரிய ஆவ ணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம், சங்ககிரி தனி வட்டாட்சியர் சாந்தனி தலைமை யில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர், சங்ககிரி சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து சங்ககிரி நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், 48 அட்டை பெட்டிகளில் ஆயிரத்து 416 பட்டு சேலை கள் இருந்தது. இதுகுறித்து சரக்கு வாகனத்தின் ஓட்டுநரி டம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டனர். இதில், சேலைகளை சலவை செய்வதற்காக சேலத்தில் இருந்து ஈரோட்டிற்கு எடுத்து செல்வதாக அவர் தெரி வித்துள்ளார். ஆனால், அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதைத்தொடர்ந்து ரூ.8 லட்சத்து 53 ஆயிரத்து 335 மதிப்பிலான பட்டு சேலைகளை தேர்தல் பறக்கும் படை யினர் பறிமுதல் செய்தனர். இதன்பின்னர், சேலைகளை சங்ககிரி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சுலை மான்சேட்டிடம் வழங்கப்பட்டு, சங்ககிரி கருவூலத்தில் ஒப்ப டைக்கப்பட்டது.