நாமக்கல், அக்.17- நாமக்கல் அருகே காவிரி ஆற்று நீரை உறிஞ்சிய லாரி யை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் பெரியார் நகர் உள்ளது. இந் நிலையில், காவிரி கரையோரம் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ள நிலையில், ஆற்றங்கரை ஓரம் மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டது. இந்த தண்ணீரை லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன்பாக அப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், காவிரி ஆற்று நீரை சட்டவிரோதமாக தனியார் நிறுவ னத்தினர் லாரி மூலமாக கொண்டு செல்வதா கவும், தண்ணீரை விற்பனை செய்வதாக குற்றஞ்சாட்டி வந்தனர். மேலும், தண்ணீர் லாரிகள் சென்று வருவதால் தார்ச்சாலைகள் சேதமடைவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அதிகாரி யிடம் கோரிக்கை மனு வழங்கினர். இந்நிலையில் திங்களன்று காலையில், தண்ணீரை எடுப்பதற்காக லாரி தோட்டத் திற்குள் நுழைவதை பார்த்த பொதுமக்கள், நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெவித் தனர். நகராட்சி ஆணையாளர் தாமரை, நக ராட்சி பொறியாளர்கள் ரேணுகா, சந்தோஷ், சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் நிரப்புவதற்காக தயாராக இருந்த லாரியை பறிமுதல் செய்தனர்.