தருமபுரி, பிப்.24- அரூர் நகரில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறையினர் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்த னர். தருமபுரி மாவட்டம், அரூர் பேருந்து நிலையத்தை சுற்றி யுள்ள மளிகை கடைகள், குளிர்பான மொத்த விற்பனை நிலையங்கள், பேக்கரிகள், பழக்கடைகள், பெட்டி கடை கள் மற்றும் பலகார கடைகளில் உணவு பாதுகாப்பு துறை யினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாது காப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஏ.பானுசுஜாதா தமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, காலாவதியான குளிர்பானங்கள், உரிய லேபிள் நடைமுறை பின்பற்றாத லோக்கல் குளிர்பான பாக்கெட்டுகள், நொறுக்கு தீணிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. ஒரு தேநீர் கடையில் கலப்பட தேயிலை பறிமுதல் செய்யப் பட்டு அழிக்கப்பட்டது. மேலும், பல கடைகளுக்கு எச்ச ரிக்கை நோட்டீஸ் மற்றும் ஐந்து கடைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.