கோவை, பிப். 23- தருமபுரி மாவட்டத்தில் இருந்து பிடிக்கப் பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடுவிக்கப் பட்ட மக்னா யானை கடந்த இரண்டு நாட்களாக கோவை மாநகரப்பகுதியில் சுற்றி திரிந்தது. குடியிருப்புகள் அதிகமுள்ள, மக்கள் நெருக்கமுள்ள பகுதியில் காட்டுயானை சுற்றி திரிவது பொதுமக்களிடையே அச்சத் தை ஏற்படுத்தியது. மேலும், தருமபுரி வனப் பகுதியில் பிடிக்கப்பட்டு, பொள்ளாச்சி டாப்சி லிப் வனப்பகுதியில் விடப்பட்டு கண்கா ணிப்பட்ட மக்கனா யானை, தனது வாழ்விட பாதையை தேடி அலைந்து வருகிறது. கோவை மாநகர் பகுதிக்குள் நுழைந்த மக்னா யானை திக்கும், திசையும் தெரியாமல் அ்ங்கும் இங்கும் அலைந்து திரிந்தது. மேலும், வனத்துறை, பொதுமக்கள் என அனைவரும் குரல் எழுப்பியும், கற் களை வீசியும் விரட்டியடித்தால் அது எங்கு செல்வது என்றே தெரியாமல், அங்குமிங் கும் அலைந்தது பெரும் சோகத்தை ஏற்ப டுத்தியது.
இந்நிலையில், மக்னாவை மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு செல்லும் முயற்சி யில் வனத்துறையினர் ஈடுபட்டனர். செவ் வாய்கிழமை முதல் யானையை வனப்ப குதிக்குள் விரட்டும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், டாப்சிலிப் யானைகள் முகா மிலிருந்து சின்னத்தம்பி கும்கி யானை அழைத்து வரப்பட்டது. இதனையடுத்து வனத்துறையினரின் மருத்துவ குழுவின் பரிந் துரையில், மயக்க ஊசி செலுத்தி மக்னா யானை பிடிக்கப்பட்டது. கோவை மாநகர பகுதியில் மூன்று நாட்களாக வனத்து றையினருக்கு போக்கு காட்டி வந்த யானை தற்போது லாரியில் ஏற்றப்பட்டது. இந்த மக்னா யானையை வனத்துறையினர் ஓசூர் வனத்துறை லாரியின் மூலம் சத்தி யமங்கலம் அடர்ந்த வனப்பகுதி அல்லது பவானி சாகர் ஈரோடு அடர்ந்த வனப்ப குதிக்குள் கொண்டு சென்று விடப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். இதுவரை இந்த யானைக்கு மூன்று மயக்க ஊசிகள் செலுத்தப் பட்டுள்ளன. மூன்று வனத்துறை அதிகாரிகள், மருத்துவர் சுகுமார், மருத்துவர் மனோகரன் மற்றும் ஓசூர் வனத்துறை மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் இந்த மக்னாவை பிடிப்பதற்காக வியாழன்று மதியத்தில் இருந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது.