districts

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறைகள் சீலிடப்பட்டன

திருப்பூர், ஏப்.20- திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல் லூரி வளாகத்தில் பாதுகாப்பாக, வைப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட் டது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட் பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் வெள்ளி யன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நி லையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமும், வாக்குப்பதிவு வைப்பு  அறையுமான பல்லடம் சாலை எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு பலத்த பாது காப்புடன் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத் தும் அலுவலருமான கிறிஸ்துராஜ், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற் றும் மத்திய பாதுகாப்பு படையினர் முன்னி லையில் சீலிடப்பட்டது. இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர் தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்ட மன்றத் தொகுதிகளுக்கும் 1745 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வெள்ளியன்று காலை தொடங்கி இரவு வரை வாக்குப்பதிவு  நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் வெள்ளி யன்று இரவு அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்குஎண்ணும் மையமும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் வைப்பறையுமான திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்ஆர்ஜி அரசு கலை அறிவியல் கல்லூ ரிக்கு கொண்டுவரப்பட்டது. இதைத்தொ டர்ந்து ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் தனித்தனி அறைகளில் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியினர், மாவட்ட ஆட்சிய ரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் முன்னிலையில் வைப்பறை யில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் 282 கண்கா ணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. இதுபோல் வைப்ப றைகளுக்கு முன்னாள் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு காவல் துறை உள்ளிட்ட  மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள் ளது.  தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்க ளின் முகவர் அடையாள அட்டை உள்ள வர்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட பகுதி வரை அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.