districts

img

கலவர பயம்: திருப்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு

திருப்பூர், ஜூன் 17 - அக்னிபாத் ராணுவ வீரர்கள் ஒப் பந்த சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரி வித்து வட மாநிலங்களில் நடந்து  வரும் கொந்தளிப்பான போராட்டங் கள் எதிரொலியாக திருப்பூர் ரயில்  நிலையத்தில் பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டு உள்ளது.  வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் திருப்பூரில் பணி யாற்றி வருவதால் இங்கும் கலவரத் தில் ஈடுபடக்கூடும் என்ற அச்சத்தில்  ரயில் நிலையத்தில் இந்த பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது. ரயில் நிலையத்திற்குள் வந்து செல்வோர் பலத்த சோதனைக்குப் பிறகு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இந்திய முப்படைகளில் இளம்  வீரர்களை அதிகளவில் சேர்ப்ப தற்கு எனச் சொல்லி புதிய ‘அக்னி பாத்’ ஆட்சேர்ப்பு திட்டம் கொண்டு  வரப்படுவதாக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சரகம் தெரிவித்திருந்தது. இதன்கீழ் ஒப்பந்த அடிப்படையில் 17.5 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் நான்கு ஆண்டு காலம் வேலை செய் வார்கள். அதன் பிறகு இந்த வீரர்க ளில் இருந்து 25 சதவிகிதம் பேர் மட் டும் நிரந்தர ராணுவத்தில் 15  ஆண்டு ஒப்பந்தத்தில் அனுமதிக்கப் படுவர் எனக் கூறப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு  வட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக்  கிளம்பியுள்ளது. குறிப்பாக ஹரி யானா, பீகார், உ.பி., உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இளை ஞர்கள் கொந்தளிப்பு அடைந்து வீதி களில் குதித்துப் போராடி வருகின் றனர். பீகாரில் சமஸ்திபூரில் பயணி கள் ரயிலின் 2 பெட்டிகளுக்கு இளை ஞர்கள் தீ வைத்தனர். பாஜக தலை வர்கள் வீடுகளையும் குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். வட மாநிலங்களில் போராட் டங்கள் தீயாகப் பரவி வரும் நிலை யில், நாட்டின் இதர பகுதிகளிலும் போராட்டங்கள் பரவக்கூடும் என்று  கருதி காவல் துறையினர் முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ரயில் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. குறிப்பாக திருப்பூரில் வட  மாநில தொழிலாளர்கள் அதிக  அளவில் இருப்பதால் கலவரத்தில்  யாரும் ஈடுபட முயற்சி செய்துவிடக்  கூடாது என்று இந்த முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு உள்ளதாக ரயில்வே காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.  ரயில் நிலைய நுழைவாயில் பகுதி யில் தடுப்பரண்கள் ஏற்படுத்தி வைத்து, இங்கு வருபவர்களை முழுமையாக சோதனை செய்த பின்னர் உள்ளே அனுமதித்து வரு கின்றனர்.