கோவை, ஜன.24- நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழா நாளை (ஜன.26) கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் பலத்த போலீஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்திய நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழா நாளை (வியாழனன்று) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு கிறது. கோவை மாநகரில் குடியரசு தின விழா நடைபெறும் வஉசி மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் வழிபாட்டுத் தலங்கள், ரயில், பேருந்து, விமான நிலையம் ஆகியவற்றில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இதனிடையே கோவை மாநகர காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன், கோவை ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரயில் நிலையத்திற்கு வரும் பயணி களின் உடமைகளை சோதனை செய்யும் ஸ்கேனர் கருவி களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மாநகரில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய ரயில் நிலையம், போத்தனூர், சிங்காநல்லூர், வடகோவை ரயில் நிலையங்கள், காந்திபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலை யங்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. பயணிகளின் உடைமைகள் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. மாநகரில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகர எல்லைகளில் உள்ள 11 சோதனைச் சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.