சேலம், டிச.7- சேலம் உருக்காலையில் மத் திய தொழில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்த சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள் ளது. ஒன்றிய அரசின் செயில் நிறு வனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சேலம் உருக்காலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் சக்திவேல் என்பவர் பணியில் இருந்த பொழுது துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். முதல் உதவிக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு வரப் பட்டது. என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண் டார்? என்பது குறித்து இரும்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். தற்கொலை செய்து கொண்ட சக்திவேலுக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.