districts

img

இரும்பு உருக்காலைக்கு எதிராக அனுப்பட்டி மக்கள் இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

திருப்பூர், ஜூன் 20- பல்லடம் வட்டம், அனுப்பட்டி ஊராட் சியில் முறைகேடாக செயல்பட்டு வரும் தனியார் இரும்பு உருக்காலைக்கு எதி ராக அந்த கிராம மக்கள் பல்லடம் வட் டாட்சியர் அலுவலகம் அருகில் நடத்தி  வரும் காத்திருப்புப் போராட்டம் இரண் டாவது நாளாக செவ்வாயன்றும் தொடர்ந்தது. ஊராட்சி நிர்வாகத்திடம் கட்டிட அனுமதி பெறாமல் இயங்கி வரும் தனி யார் இரும்பு உருக்கு ஆலையை இடித்து அகற்ற வேண்டும் என வலி யுறுத்தி இந்த போராட்டத்தை மேற் கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த இரும்பு ஆலையால் சுற்றுச்சூழல் மாசு படுவதுடன், சுற்றுப்புற கிராம மக்க ளுக்கு பல்வேறு உடல் உபாதைகளை யும் ஏற்படுத்தி வருகிறது என மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராட் டம் நடத்தி வரும் மக்கள், தற்போது இந்த  ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்

 என்று வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவ லகம் முன்பாக காத்திருப்புப் போராட் டத்தை திங்களன்று தொடங்கினர். கிராம மக்களுடன் பல்லடம் வட்டாட் சியர் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்ப டையில் முறையாக உரிமம் பெறாமல் இயங்கும் இந்த ஆலையை தற்கா லிகமாக மூடவும் பல்லடம் வட்டாட் சியர் உத்தரவிட்டிருந்தார்.  எனினும் சில நாட்கள் ஆலையின் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்த நிலை யில்  அனைத்து அனுமதிகளும் பெற்று விட்டதாக கூறி மீண்டும் ஆலையை இயக்க ஆரம்பித்துள்ளனர். ஊராட்சி நிர்வாகத்தில் கட்டட அனுமதி பெறாமல்  ஆலை இயங்குவதால் அனுப்பட்டி ஊராட்சி ஆலையின் கட்டடங்களை இடிக்க நோட்டீஸ் பிறப்பித்தது. ஆனால் ஊராட்சி நிர்வாகத்தின் நோட் டீஸை ஏற்காமல் ஆலை மீண்டும் செயல்படுகிறது. பல்லடம் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு அனுப்பட்டி, பணிக்கம்பட்டி, ஆறாகுளம், அய்யம் பாளையம், புளியம்பட்டி, கரடிவாவி  ஆகிய கிராமங்களைச் சேர்ந்த  400க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடும் மக்களு டன் அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தை நடத்த வராத நிலையில் காத் திருப்பு போராட்டம் தொடர்ந்து நடை பெற்றது. இரண்டாவது நாளாக செவ் வாயன்றும் போராட்டம் தொடர்ந்தது.  இப்போராட்டத்திற்கு பல்வேறு அரசி யல் இயக்கத்தினரும் ஆதரவு தெரிவித் தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் திங்களன்று போராட் டத்தை வாழ்த்திப் பேசினார். போராடும்  மக்களுடன் மார்க்சிஸ்ட் கட்சி உடனி ருக்கும், என்று அவர் கூறினார்.