கோவை, நவ. 23 - அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகத்திற்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அனுமதி யின்றி பேனர் வைப்பது, சுவர் விளம்பரங்கள் ஒட்டுவது, பொது இடங்களில் குப்பை கொட்டுவது உள்பட பல்வேறு விதி மீறல்களை கண்காணித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக, கோவை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு கட்டிடங்கள் அனுமதி பெறாமலும், விதி மீறலுடன் கட்டப்படுவதாக பல்வேறு புகார்கள் கோவை மாநக ராட்சிக்கு வந்தது. இந்நிலையில் ரங்கே கவுண்டர் பகுதி யில் உள்ள கட்டிட உரிமையாளர் பிரகாஷ் குமாரி என்பவர் அனுமதி பெறாமல் 1083.48 சதுர மீட்டர், 11662.57 சதுர அடியில் வணிக வளாகம் கட்டியுள்ளார். இந்த கட்டிடம் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டா வது தளத்தைக் கொண்டதாகும். இதையடுத்து அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதால் கோவை மாநகராட்சி அதி காரிகள் அந்த கட்டிடத்தை பூட்டி சீல் வைத்தனர். மேலும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி இல் லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் சீல் வைக் கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.