districts

விதிகளை மீறி கட்டப்பட்ட தனியார் கட்டிடத்திற்கு சீல்

உதகை, ஜூன் 29- உதகையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட தனியார் வணிக வளாகத் திற்கு நகராட்சி அதிகாரகள் சீல் வைத் தனர். நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச் சூழல் பாதிப்பை தடுக்கவும், எதிர்காலத்தில் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள் ளும் வகையிலும் கட்டிடங்கள் கட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக, 1993 ஆம் ஆண்டு “மாஸ்டர் பிளான்” சட்டப்படி 7 அடிக்கு மேல் கட்டி டங்கள் கட்டவும், 30 டிகிரி சரிவான பகுதி களில் கட்டிடங்கள் கட்டவும் தடை விதிக் கப்பட்டது. இதன்படி 1993 ஆம் ஆண் டுக்கு பிறகு விதிமுறைகளை மீறி ஆயி ரத்து 337 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ள தாக கணக்கெடுக்கப்பட்டது. இவ்வாறு விதிமுறை மீறி கட்டப்பட்ட பல கட்டி டங்கள் சீல் வைக்கப்பட்டன. இந்நிலை யில், கடந்த 1999 ஆம் ஆண்டு கேசினோ சந்திப்பு பகுதியில் விதிமுறைகளை மீறி 3 தளங்களுடன் தனியார் வணிக வளாகம் கட்டப்பட்டதாகக் கூறப்படு கிறது. இதைத்தொடர்ந்து நகராட்சி நிர் வாகத்தினர் அந்தக் கட்டிடத்திற்கு சீல்  வைக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், தனியார் வணிக வளாகத்தி னர் இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த மாதம் கூறப்பட்ட தீர்ப்பில், விதிமுறை மீறி கட்டப்பட்ட வணிக வளாக கட்டி டத்தை இடிக்க உத்தரவிட்டது.  இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் வணிக வளாக உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. ஆனாலும், வணிக வளாகம் காலி செய்யப்படவில்லை. இதைத் தொடர்ந்து வணிக வளாகத்திற்கு சீல் வைக்க நகராட்சி ஆணையாளர் காந்தி ராஜன் உத்தரவின் பேரில், நகரமைப்பு திட்ட அதிகாரி ஜெயவேல், நகர அமைப்பு திட்ட ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் அதிகாரிகள் சென்றனர். இதற்கிடையே வணிக வளாகத்தின் 3  ஆவது தளத்தில் வழிபாட்டுத்தலம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனால் வழிபாட்டுத்தலத்தை இடிப்பதாக தக வல் பரவியதால் பொதுமக்கள் ஏராள மானோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் நகராட்சி நிர்வாகம் சார் பில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வணிக வளாகத் தில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள கடைகள் மற்றும் அலுவலகங்க ளுக்கு மட்டும் சீல் வைக்கப்படும் என் றும், வழிபாட்டு தளத்திற்கு சீல் வைக்கப் படாது என்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இத னால் பொதுமக்கள் சமாதானம் அடைந் தனர். இதை தொடர்ந்து நகராட்சி நிர்வா கத்தினர் வணிக வளாகத்தில் தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த கடைகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.