districts

img

விதியை மீறி எழுப்பப்பட்ட கட்டிடத்திற்கு சீல்

பொள்ளாச்சி, ஏப்.11- பொள்ளாச்சியில் விதியை மீறி எழுப்பப்பட்ட கட்டி டத்திற்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள  மகாலிங்கபுரம் எல்.ஜ.ஜி.காலனி ‘பி’ பிளாக் பகுதி யைச் சேர்ந்த காலிங்கராயன் என்பவர் தனக்கு சொந்த மான 15 ஆயிரம் சதுரடி கொண்ட இடத்தில் வீடு கட்ட நகராட்சியிடம் அனுமதி கோரியிருந்தார். இதையடுத்து நடைபெற்ற ஆய்வுக்கு பின் வீடு கட்ட நகராட்சி நிர்வா கம் அனுமதி அளித்தது. ஆனால், காலிங்கராயன் வர்த் தக நோக்கில் பள்ளிக்கான கட்டிடமாக கட்டினார். இந்நிலையில், வீடு கட்ட அனுமதி பெற்று விதிமுறை களை மீறி பள்ளி கட்டிடமாக கட்டியதையறிந்த பொள் ளாச்சி  நகராட்சி நிர்வாகத்தினர் திங்களன்று மேற்படி கட்டிடத்துக்கு பலத்த காவல் துறையினரின் பாதுகாப்பு டன் சீல் வைத்தனர்.