districts

img

கவிஞர் யுகபாரதிக்கு சிற்பி இலக்கிய விருது வழங்கல்

பொள்ளாச்சி, ஜன.1- பொள்ளாச்சியில் நடைபெற்ற கவிஞர் சிற்பியின் 85வது நிறைவு விழாவில் கவிஞர் யுகபாரதிக்கு சிற்பி இலக்கிய விருது வழங்கப்பட் டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில் கவிஞர் சிற் பியின் 85 நிறைவு விழா மற்றும்  சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா குன்றக்குடி திருவண்ணா மலை ஆதீனம்  பொன்னம்பல அடி களார் மற்றும் கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர்  தலை மையில் நடைபெற்றது. கவிஞர்  கிருங்கை சேதுபதி  வரவேற்புரை யாற்றினார். கலை இலக்கிய விமர் சகர் இந்திரன், கல்லூரி முதல்வர் ரெ. முத்துக்குமரன் ஆகியோர் வாழ்த் துரையாற்றினர்.இதையடுத்து சித்திர சிற்பி, ஒரு கிராமத்து நதி, இது கேள்வி களின் புத்தகம், முகந்து தீராக்கடல், புதுக்கவிதை வேரும் விழுதும்,  கவிதையே வாழ்வாக, கவிதைக் கொண்டாட்டம் போன்ற கவிதை நூல் களை கவிஞர் சிற்பி பாலசுப்ரமணி யம் வெளியிட கல்லூரித் தலைவர் டாக்டர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பெற்றுக் கொண்டார். மேலும், கவிஞர் சிற்பி  எழுதி அரிமளம் சு.பத்பநாபன் இசையமைத்த “இசைப்பேழை” என்னும் குறுந்தகடு வெளியிடப்பட் டது.  இதன்பின், குன்றக்குடி பொன் னம்பல அடிகளார் பேசுகையில்;- “தமிழுக்கு அருங்கொடை தந்தவர் சிற்பி. மொழிபெயர்ப்புகள் சிறந்த வையாக இருக்க வேண்டுமென்றால், மொழிபெயர்ப்பாளர்கள்  மனிதநே யம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

அத்தகையவர் நமது கவி ஞர் சிற்பி. ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கைக் கையோட்டிலும் கையொப்பமிட்டவர் சிற்பி என்றால்  மிகையாகாது. சிற்பியின் கனவுக ளும் ஆசைகளும் நிறைவேற வேண் டும். இவ்வாறு அவர் பேசினார். முடி வில், சேலம்   பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெரியசாமி நிறைவுரையாற்றினார். இதைத்தொடர்ந்து சிற்பி இலக் கிய விருது வழங்கும் விழா நடை பெற்றது. இதில் சிற்பி இலக்கிய விருது  திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான யுகபாரதிக்கு வழங்கப் பட்டது. அவ்விருதை  கல்லூரித் தலை வர் டாக்டர் கிருஷ்ணராஜ் வாணவ ராயர் வழங்க,  கவிஞர் யுகபாரதி பெற் றுக்கொண்டார்.   மேலும், கவிஞர் இந்திரன் அவர் கள் இயக்கிய கவிஞர் சிற்பியின் வாழ்க்கைப் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.  

இதன்பின்னர் ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் த.செ. ஞானவேல்  சிறப்பு விருந்தினராக பங் கேற்று  கவிஞர் சிற்பி குறித்து உரை யாற்றினார். இதனைத்தொடர்ந்து பேராசிரியர் க.பஞ்சாங்கம் மற்றும் சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனர் செந்தலை கவுதமன் மற்றும் தமிழ் நாடு சமூக நீதிக் கண்காணிப்புக்குழு தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகி யோர் வாழ்த்தி உரையாற்றினர். முடி வில், பொள்ளாச்சி இலக்கிய வட்டத் தின் செயலாளர் கவிஞர் இரா.பூபா லன் நன்றி கூறினார்.  முன்னதாக, இவ்விழாவில் கல் லூரி செயலர் மா.பாலசுப்பிரமணி யம், குமரகுரு பொறியியல் கல்லூரி யின் இணைத் தாளாளர் சங்கர் வாண வராயர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழ கத்தின் மேனாள் துணைவேந்தர் சி. சுப்பிரமணியம், இயகாகோ சுப்பிர மணியம் உட்பட ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்துக் கொண்டனர்.