districts

img

அரசுப்பள்ளியில் அறிவியல் திருவிழா

நாமக்கல், மே 5- நாமக்கல் மாவட்டம்,  பள்ளிபாளையம், கண்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி வளாகத்தில் அறிவியல் திரு விழா நடைபெற்றது. இதில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கோடை விடுமுறையில், மாணவர்கள் பயன்பெறும் வகையில், அறிவியல் திருவிழா ஒவ்வொரு கிராமத் திலும் தமிழக பள்ளிக் கல்வித்துறையால் தற்போது நடைபெற்று வருகிறது.  பள்ளி பாளையம் ஒன்றியம், கண்டிபுதூர்  தொடக்கப் பள்ளி வளாகத்தில், இல்லம் தேடி  கல்வி மற்றும் வானவில் மன்றம்  இணைந்து அறிவியல் திருவிழா நடை பெற்றது. வட்டார கல்வி அலுவலர் குண சேகரன்  அறிவியல் திருவிழாவை தொடங்கி  வைத்து உரையாற்றினார்.  இதில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கண்டிப்புதூர் தலைமை ஆசிரியர் (பொ)  புவனேஸ்வரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பாதரை தலைமை ஆசிரியர் சரவணன்   மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் திரளா னோர் பங்கேற்றனர். இந்த அறிவியல் திரு விழாவில் வானவில் மன்ற கருத்தாளர் குண சேகர் எளிய அறிவியல் பரிசோதனைகள்,  மைவிழிச்செல்வி கற்பனையும் கைத் திறனும், சமையலறையில் அறிவியல்  மற்றும்  அவர்கள் புதிர் கணக்குகள், விநாடி -  வினா போட்டி நிகழ்வுகளை மாணவர் களிடையே செய்து காண்பித்தனர். முன்னதாக, தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின்  சார்பில், விநாடி - வினா போட்டி  நடைபெற்றது. இப்போட்டியில் பங்கு  பெற்ற அனைத்து மாணவ, மாணவியர் களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப் பட்டது.