districts

img

சிறார்களுக்கு அறிவியல் விழா

திருப்பூர், மே 3 – திருமுருகன்பூண்டி எம்.ஜி.ஆர் என்.எஸ்.பி நகர் குடி யிருப்பு பகுதியின் சிறார்களுக்கு அறிவியல் ஆராய்வு முயற் சிக்கான முதல் கட்ட பயிற்சிகள் தரப்பட்டன. அவினாசி ஒன்றிய பள்ளிக்கல்வித் துறை சார்பாக அறி வியல் பயிற்சியாளர் பரமேஸ்வரி சார்ந்த குழு செவ்வா யன்று இந்த நிகழ்ச்சியை நடத்தியது. குழந்தைகள் படைப் பாற்றல் திறன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த  பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் குழந்தைகளைப் பங்கு பெறச் செய்ய பெற்றோர் முன்வர வேண்டும் என்று நுகர் வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் காதர்பாட்சா கூறினார்.  மேடை பயம் நீங்கி தைரியமாக பதிலளித்த குழந்தைக ளைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் சதாசிவம், சங்க நிர்வாகிகள் அசோக்,  முருகேசன், லட்சுமி நாராயணன், சிவா, சரவணன், மோகன் ராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.