திருப்பூர், ஆக. 13 - திருப்பூர் பெரிய கடை வீதியில் குழாய் சீரமைப்பு பணிக்குத் தோண்டப் பட்ட குழி நான்கு நாட்களாக மூடப்ப டாமல் ஆமை வேகத்தில் பணி நடை பெற்று வருவதால், பள்ளி செல்லும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகியுள்ள னர். திருப்பூர் மாநகராட்சி பெரியகடை வீதி பகுதியில் குழாய் சீரமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது கடந்த நான்கு நாட்களாக இந்தக் குழி தோண்டப்பட்ட நிலையில் எந்தவித பணிகளும் நடைபெறாமல் உள்ளது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள பழனியம்மாள் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாநக ராட்சி நடுநிலைப் பள்ளி என மூன்று பள் ளிகளுக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் செல்லும் பிரதான சாலை யாக உள்ளது. ஆனால் பள்ளம் தோண் டப்பட்டு பெயரளவுக்கு மட்டுமே பணி கள் நடைபெற்று வருவதால் அப்பகுதி வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு கடுமையான போக்குவ ரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல சிரமப் பட்டு வருகின்றனர். விரைந்து பணி களைச் செய்தால் ஒரு நாளில் முடிக்க வேண்டிய இந்த பணியை, நான்கு நாட் கள் மெத்தனமாக வேலை பார்ப்பதா கவும், பணியை மிகவும் தாமதப்ப டுத்துவதாகவும் மக்கள் குற்றம் சாட்டு கின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரி களிடம் கேட்டபோது பணிகள் நிறைவ டைய மேலும் நான்கு நாட்களாகும் என அலட்சியமான பதில் தெரிவிக்கின் றனர். பள்ளி மாணவர்கள் அதிகம் பயன் படுத்தும் சாலை என்பதை மாநகராட்சி நிர்வாகம் மனதில் கொண்டு விரைந்து பணிகளை முடிக்க வேண்டும். இது குறித்து மேயர் கவனிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.