districts

“அம்மாவை அடிக்கும் அப்பா மீது நடவடிக்கை எடுங்க”

பொள்ளாச்சி, பிப்.7- “அம்மாவை அடித்து, உதைக்கும் அப்பா  மீது நடவடிக்கை எடுங்க” என எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டினத்தை சேர்ந்த சரவணன் - செல்வி ஆகியோரின் மகள் மதுஸ்ரீ, அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். தனது தம்பி ஆறாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் உடன் பள்ளி சீருடையுடன்  பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தனது தந்தை சரவணன், அம்மா செல்வி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனது தாயுடன் நாங்கள் உள்ளோம். தங்க ளது தந்தை தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தனது தாயாரை அடித்து உதைத்து மிரட்டல் விடுத்து வருகிறார். வீட்டில் உள்ள  பாத்திரங்கள்  தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்து சேதப்படுத்துகிறார். இதுகுறித்து கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித் தால் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்கு கின்றனர்.  எனவே, எனது தந்தை மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும். கஷ்டப்பட்டு எங்களை வளர்த்து ஆளாக்கி வரும் அம்மாவை, தினந் தோறும் குடித்துவிட்டு அப்பா தகராறில் ஈடு பட்டு வருகிறார். எவ்வளவோ முறை கூறி யும் திருந்துவதாக இல்லை. பெற்ற மகள் என்று பாராமல் தகாத வார்த்தையில் பேசி வருகிறார். ஆகவே, பள்ளி செல்வதாக கூறி அதிகாரிகளிடம் மனு கொடுக்க வந்தோம், என்றனர்.