districts

img

கல்வி உதவித்தொகை வழங்கல்

தருமபுரி, ஜூலை 30- கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் 5 பேருக்கு ரூ.2.43 லட்சம் கல்வி உதவித்தொகைகளை ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியர் கி.சாந்தி தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, உபகரணங்கள், பட்டா, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தி 576 மனுக்களை வழங்கினர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், சிகாமணி என்ற மாற்றுத்திற னாளி தனக்கு ஊன்றுகோல், நவீன காதொலிக் கருவி கோரியதன் அடிப்படையில், அவருக்கு ரூ.750 மதிப்பிலான ஊன்றுகோல், ரூ.2,700 மதிப்பில் காதொலிக் கருவி ஆகி யவை வழங்கப்பட்டன. மேலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், தொழிலா ளா் நலவாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்க ளின் குழந்தைகள் 5 பேருக்கு ரூ.2.43 லட்சம் கல்வி உதவித் தொகைகளை ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார். இந்நி கழ்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்கு மார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சையது முகைதீன் இப்ராகிம், தனித்துணை ஆட்சியர் தனப்பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.