தருமபுரி, ஜுன் 3- தருமபுரியில் படித்து வேலை இன்றி உள்ள பெண்களை வாருங்கள் சம்பளம் 15,000 ரூபாய் எனக்கூறி 11 ஆயிரம் வரை வசூல் செய்து பல லட்சம் ஏமாற்றிய தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர். தருமபுரி அருகே உள்ள அமுதம் காலனி பகுதியில் ட்ரான்ஸ் இந்தியா என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் படித்த குடும்ப பெண்க ளுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத் தில் வேலை தருவதாக கூறி சமூக வலை தளம் மற்றும் உள்ளுர் சேனல்களில் விளம்பரம் கொடுத்துள்ளனர். விளம்ப ரத்தை பார்த்த பெண்கள் அந்த நிறுவ னத்தை அனுகியுள்ளனர். நிறுவனத்தில் வேலை கேட்டு வந்த பெண்களிடத்தில் நுழைவு கட்டணம் ரூ.100 என்றும், நேர்முகத் தேர்வு எழுத ஆயிரம் ரூபாயும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு 10 ஆயிரத்து 500 ரூபாய் கட்டினால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் எனக் கூறியதையடுத்து சுமார் 45 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்க ளுடைய கால் கொலுசு, காதணிகள் உள்ளிட் டவைகளை அடமானம் வைத்தும், விற்றும் பணத்தைக் கட்டி பணியில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், பணியில் சேர்ந்த போது அவர்களுக்கு சில அழகு சாதன பொருட்கள், சத்துமாவு உள்ளிட்ட கிஃப்ட் பாக்ஸை கொடுத்து இது உங்களுக்கு இலவசம் என்று கொடுத்துள்ளனர். பின்னர் மூன்று மாத காலம் முடிந்த பின்னர், வேலையும் தரவில்லை, ஊதியமும் தரவில்லை, இதனையடுத்து பெண்கள் கேள்வி எழுப்பியபோது, நிறுவன உரிமையாளர் பெண்களை தகாத வார்த்தை களால் திட்டி, நீங்கள் கட்டிய பணத்திற்கு அழகு சாதன பொருட்கள் கொடுக்கப்பட்டது எனக் கூறி மிரட்டியுள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பெண்கள் ஒன்று திரண்டு தனியார் நிறுவனத்தை இழுத்து பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு தருமபுரி காவல் நிலையத்திற்கு சென்று ஏம்மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.