அவிநாசி, டிச. 14- திருப்பூர் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் அண்மை யில் திருப்பூர் ஜெய்வாபாய் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவிகள் 8 பேர் பிற மாநில நாட்டியத்திலும், 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 9 பேர் ஒயிலாட் டத்தில், 8 மாணவர்கள் பிற வகை நடன போட்டியிலும் முதலிடம் பெற்ற னர். 9 ஆம் வகுப்பு மாணவன் சாய்ராம் புல்லாங்குழல் வாசித்தலில் முதலி டம் பெற்றார். இவர்கள் மாநில அளவில் நடைபெறும் கலைத்திறன் போட்டி யில் பங்கேற்க தேர்வாகி உள்ளனர். மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசி ரியர் கிருஷ்ணவேணி, பெற்றோர் ஆசிரி யர் கழக தலைவர் க.பால்ராஜ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.