districts

img

சேவூர் சிறந்த கூட்டுறவு வங்கியாக தேர்வு

அவிநாசி, நவ.20- பல்லடத்தில் ஞாயிறன்று அனைத்து கூட்டுறவு வார விழா வில், சிறந்த கூட்டுறவு வங்கியாக சேவூர் கூட்டுறவு வங்கி  தேர்வு செய்யப்பட்டுள்ளது.  திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட சேவூர் ஊராட்சியில் உள்ள கூட்டுறவு வங்கி சிறந்த வங்கியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பாராட்டு விழா பல்ல டத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், செய்தி துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு கேடயம் வழங்கி னார். இந்த கூட்டுறவு வங்கியின் தலைவராக சேவூர் ஜி. வேலுச்சாமி, செயலாளராக ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் நிர்வா கிகளாக உள்ளனர். இந்த நிகழ்வில் மாவட்ட இணை பதி வாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.