உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், கோவை மாவட்டம், பீளமேடு நகரக்குழு சார்பில், ஈபி காலனியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா, பீளமேடு நகரச் செயலாளர் சக்திவேல் மற்றும் கிஷோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.