சேலம், அக்.19- தீபாவளி போனஸ் வழங்குமாறு தூய்மை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 99 பேர் பணியாற்றி வருகின்றார்கள். இவர்களுக்கு இம்மாத ஊதியம் மற்றும் தீபாவளி போனஸ் 8.33 சதம் வழங்க வலியுறுத்தி மேட்டூர் நகராட்சி நிர்வாகத்திடமும், ஒப்பந்ததாரி டமும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், உடன்பாடு ஏற்படாத நிலையில் திங்களன்று முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மூன்றாம் நாளாக தொடர்ந்து புதனன்று வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் சின்னபார்க் அருகில் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் மற்றும் தீபாவளி போனஸ் வழங் கும் வரை போராட்டம் தொடர்ந்து நடை பெறும் என தெரிவித்தனர். இதில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சி.கருப்பண் ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.