districts

img

பூண்டி நகராட்சியில் தொழிலாளிகள் பணி நீக்கம்: வேலையை நிறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்

அவிநாசி, ஆக.10 - திருமுருகன்பூண்டி நகராட்சி யில் மூன்று தொழிலாளிகள் பணி  நீக்கத்தைக் கண்டித்து வியாழனன்று  சிஐடியு சார்பில் தூய்மை பணியாளர் கள் வேலையைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நகர்ப்புற  உள்ளாட்சி தூய்மைப் பணியில்  அவுட்சோர்சிங் முறை நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது. இதனைக் கண்டித்து பல்வேறு கட்ட போராட் டம் நடைபெற்று வருகிறது. இந்நிலை யில் திருமுருகன்பூண்டி நகராட்சி யில், 15 நாட்களுக்கு முன்பாக எவ் வித முன்னறிவிப்பும் இன்றி திடீ ரென்று மூன்று தொழிலாளிகளை ஒப் பந்ததாரர் பணி நீக்கம் செய்துள் ளார். இதுகுறித்து சிஐடியு சார்பில் திரு முருகன்பூண்டி நகராட்சி ஆணைய ருக்கும், நகரமன்ற தலைவருக்கும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதில், மூன்று தொழிலாளிகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வருகின்றனர். எந்தவித முன் னறிவிப்பும் இன்றி இவர்களை பணி  நீக்கம் செய்துள்ளனர். இவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று அதில் கேட்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நகரமன்றத் தலைவர் குமார், ஒப்பந்ததாரரிடம் பணியில்  சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார். இருப்பினும் ஒப்பந்ததா ரர் மறுப்பு தெரிவித்துள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக ளுக்கு மாற்றாக ஒப்பந்ததாரர் வேறு  தொழிலாளிகளை பணியில் சேர்த்து  உள்ளார். இதன் காரணமாக வியாழனன்று சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் திருமுரு கன் பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு காலை 7 மணி முதல் போராட் டத்தில் ஈடுபட்டனர். மூன்று தொழிலா ளிகளுக்கும் வேலை வழங்க வேண் டும் என்ற கோரிக்கையை முன்வைத் துப் போராடினர். இதனை அறிந்த திரு முருகன்பூண்டி காவல்துறை அதி காரி அங்கு வந்து ஒப்பந்ததாரரிட மும், சிஐடியு சங்க நிர்வாகிகளிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார், இறுதியாக சனிக்கிழமை முதல்  மூன்று தொழிலாளிகளை பணியில்  சேர்த்துக் கொள்வதாக உறுதியளித் ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் பணிக்குச் சென்றனர்.