districts

img

ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு: தூய்மை பணியாளர்கள் போராட்டம்

ஈரோடு, மே 16- கோபி நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்க ளுக்கு ஊதியம் வழங்கமல் இழுத் தடிப்பதால் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் நகராட்சி 30 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு  பொது சுகா தாரப் பிரிவில் தூய்மை பணியாளர் கள், ஓட்டுநர்கள் மற்றும் டெங்கு, மலேரியா கொசு ஒழிப்பு பணியாளர் கள் ஒப்பந்த பணியாளர்களாக உள்ள னர். இவர்களுக்கு நகராட்சி சுகாதா ரப்பணியை டெண்டர் எடுத்துள்ள நிறுவனங்கள் ஊதியம் வழங்கி வரு கிறது. அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்குவதில்லை என்கிற குற்றச் சாட்டு தொடர்ந்து உள்ள நிலையில், தற்போது, ஏப்பரல் மாதத்திற்கான  ஊதியம் தற்போது வரையில் தரா மல் உள்ளது. இதனால், இந்த ஊழி யர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். இதனையடுத்து, ஊதியம் கேட்டு தூய்மை பணியாளர்கள் பணி களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து,  சிஐடியு ஈரோடு மாவட்ட தலைவரும், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத் தலைவருமான எஸ்.சுப்ரமணியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் நக ராட்சி ஆணையர் ஆகியோரிடம்  கோரிக்கை மனு அளித்தனர்.