districts

ஈரோட்டில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அக்.9- ஈரோடு மாநகராட்சியில் பொது சுகா தார பணியினை தனியாரிடம் கொடுக் கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண் டும் என வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பின் சார்பாக மாநக ராட்சி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சியில் பொது சுகா தார பணிகளை ஒப்பந்த முறையில் கொடுப்பதற்காக கடந்த ஜுன் மாதத்தில் ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பு வெளியிடப் பட்டது. அவுட்சோர்சிங் முறையில் பொது சுகாதாரப் பணியை தனியாரிடம் ஒப்ப டைப்பதால் 15 ஆண்டுகள் வரை பணி யாற்றிய தொழிலாளர்களின் வாழ்வா தாரம் முற்றிலும் பறிக்கப்படும் என  சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் ஆட்சே பணை தெரிவித்தது. அத்துடன் தனி யாரிடம் கொடுக்கும் மாநகராட்சியின் முடிவைக் கைவிட வேண்டும், தற் போது உள்ள நிலையே தொடர வேண் டும் என்று வலியுறுத்தி தொடர் இயக் கங்கள் நடைபெற்று வருகிறது. இதற் கிடையில் குறைந்தபட்ச ஊதியம் குறித்த அரசாணை சட்டத்திற்குப் புறம் பானது என்ற காரணத்தால் சென்னை  உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித் தது. இந்நிலையில், ஒப்பந்தம் பெற்ற சேலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகளை 4 மண்டலங்களிலும் கடந்த 20 நாட்களாக பணிகளை மேற் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.  இதுகுறித்து மாமன்ற உறுப்பினர்க ளுக்கோ, தூய்மை பணியாளர்க ளுக்கோ தெரிவிக்கப்படவில்லை.  எனவே, தனியார் நிறுவனத்தை அனு மதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத் திட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு எல்பிஎப் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்பிரமணியன், ஏஐடி யுசி சின்னசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். சிஐடியு மாணிக்கம், ஆதித் தமிழர் மாரியப்பன் மற்றும் திரளான தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடி வில் மனு கொடுக்கப்பட்டது.