districts

img

நிலுவை ஊதியத்தை வழங்க தூய்மைப் பணியாளர்கள் மனு

தருமபுரி,ஜூலை 30- தூய்மைப் பணியாளர்களுக்கு 7 ஆவது ஊதியக்குழுவின்படி உயர்த்தப் பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, தூய்மைப்பணியாளர்கள் தரும புரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வயன்று மனு அளித்தனர்.  அந்த மனுவில் கூறியதாவது, தரும புரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் அனைத்து மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி இயக்குநர்களுக்கு ஒரே மாதி ரியான ஊதியத்தை மாவட்ட ஆட்சி யர் கருவூல அலுவலகத்தில் முறைப் படி கணக்கிட்டு வழங்க வேண்டும். மேலும், கிராம ஊராட்சியில் பணிபுரிந்து  வரும்  தூய்மைப் பணியாளர்களுக்கு 7 ஆவது  ஊதியக்குழுவின் படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கவில்லை. அதேபோல, 2013 ல் நியமனம் செய்யப்பட்ட கூடுதல் தூய்மைப் பணியாளர்களுக்கும், ஏழா வது ஊதியக்குழுவின் படி உயர்த்தப் பட்ட நிலுவை ஊதியத்தை வழங்க வில்லை. எனவே, 7 ஆவது ஊதியக்குழு வின் படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை அனைத்து பணியாளர் களுக்கும் வழங்க வேண்டும். மாதத் திற்கு இரண்டு முறை மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்வதற்கு மாதம் ரூ.300-ஐ வழங்க வேண்டும் என்கிற உத்தரவு, எந்த ஊராட்சியிலும் இதுநாள் வரை வழங்கவில்லை. கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய் மைக் காவலர்களுக்கு மாதம் 5ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.