districts

img

திருமுருகன்பூண்டி நகராட்சியில் திடீர் பணி நீக்கம் தூய்மைப் பணியாளர்கள் உணவு சமைத்து உள்ளிருப்பு போராட்டம்

அவிநாசி, செப்.1 – திருமுருகன்பூண்டி நகராட்சியில் திடக் கழிவு மேலாண்மைப் பணியாளர்கள் தனியார் மயம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீரென பணி  நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து இந்நகராட்சியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை  நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு அங்கேயே  தங்கி சமைத்து சாப்பிடும் போராட்டத்தை நடத்தினர். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி களில் அவுட்சோர்சிங் என்ற பெயரில் திடக் கழிவு மேலாண்மை பணி கடும் எதிர்ப்புக்கு  இடையே தனியார்மயம் ஆக்கப்பட்டுள்ளது.  அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வேலை, குறைந்தபட்ச கூலிச் சட்டப்படி நியா யமான ஊதியம் வழங்க வேண்டும் என்று சிஐ டியு சங்கம் தொடர்ந்து பல கட்டப் போராட் டங்களையும் நடத்தி வருகிறது. திருமுருகன்பூண்டி நகராட்சியில் 70 -க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர் களும், 30க்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணி யாளர்களும் பணி செய்து வருகின்றனர். இதில் 50 வயதுக்கு மேற்பட்ட தூய்மை பணி யாளர்கள் 36 பேரையும், கொசு ஒழிப்பு  பணியாளர்கள் 19 பேரையும் அவுட்சோர்சிங்  ஒப்பந்ததாரர் முன்னறிவிப்பு இல்லாமல் பணி  நீக்கம் செய்துள்ளார்.

இதனைக் கண்டித்து சிஐடியு சார்பில் தூய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் வெள்ளியன்று அதிகாலை முதல் வேலையை நிறுத்தி, திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு உணவு சமைத்து சாப்பிட்டு அங் கேயே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட் டனர். முன்னதாக காலையில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ் கலந்து கொண்டார்.  இதனைத்தொடர்ந்து திருமுருகன் பூண்டி நகராட்சி ஆணையர், காவல்துறை அதிகாரி ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சி நகர் மன்ற உறுப்பினர் சுப்பிரமணி, சிஐடியு  நிர்வாகி பாலசுப்பிரமணியம் உள்ளிட் டோரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். தூய்மை பணியாளர்கள் மீண்டும் பணி யில் தொடர்வது என்றும், கொசு ஒழிப்பு  பணியாளர்கள் குறித்து இருநாட்கள் அவகா சத்திற்குள் பேசி முடிவெடிப்பதாகவும் தெரி வித்தனர். இதை தொடர்ந்து தொழிலாளி களிடம் சிஐடியு நிர்வாகிகள் விபரம் தெரிவித் தனர். தொழிலாளர்கள் இதை ஏற்று சமைத்து  சாப்பிட்டு காத்திருக்கும் போராட்டத்தை நிறுத்திக் கொண்டனர். அதேசமயம் 50 வயது உடையவர்கள் என  காரணம் சொல்லி தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதை ஏற்க முடி யாது. தற்போது நகராட்சி நிர்வாகம் அளித் துள்ள உறுதிமொழியை ஏற்று போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று சிஐடியு தலைவர்கள் கூறினர்.