districts

தூய்மை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வெற்றி

ஈரோடு, மே 18- கோபி நகராட்சியின் அடாவடி போக்கு  காரணமாக  தினக்கூலி தொழிலாளர்களுக்கு 3 ஆவது நாளாக வேலை மறுக்கப்பட்ட தால், போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போ ராட்டத்திற்கு ஆதரவாக சிஐடியு களமிறங் கிய நிலையில், பேச்சுவார்த்தையில் நகராட்சி நிர்வாகம் வேலை மற்றும் ஊதியம் வழங்கு வதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில், நகராட்சி யின் முக்கிய பணிகளில் ஒன்று பொது சுகா தாரம். குப்பைகளை அகற்றுதல், கழிவு நீர் அகற்றுதல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் நிரந்தரம் செய்யப் படாமல் அத்தக்கூலிகளாக தூய்மை பணியா ளர்களின் உழைப்பை கோபி நகராட்சி சுரண்டி வருகிறது. மேலும், குறைந்தபட்ச கூலி, சட் டப்படியான ஊதியம் கூட வழங்கப்படுவ தில்லை. இதற்கு நிகராக மாவட்ட ஆட்சியர் கள் தங்கள் செயல்முறை ஆணைகளில் தீர்மானிக்கும் ஊதியத்தையும் வழங்குவ தில்லை. சுமார் 70 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கோபிசெட்டிபாளையம் நகராட்சி யில், பொது சுகாதார பிரிவில் 70 நிரந்தர பணி யாளர்களும், 100க்கும் மேற்பட்ட தினக்கூலி,  ஒப்பந்த தொழிலாளர்களும் உள்ளனர். இங்கு கடந்த சில ஆண்டுகளில் ஒப்பந்ததாரர்களாக இருந்த நெப்டியூன், எஸ்எஸ், சதர்ன் சாலிட் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களுக் குப் பிறகு தற்போது ஒப்பந்ததாரர் நிறுவனம் மாறியுள்ளது.

இதுகுறித்து விசாரிக்க வாய்ப்பில்லை என்பதாக கோபி நகராட்சி ஆணையர் பணியிடம் காலியாக உள்ளது. பொறுப்பு வகிக்கும் பொறியாளரும் கண்டு கொள்வதில்லை என்கிற நிலையே உள்ளது. இந்நிலையில், கடந்த மாத ஊதியத்தை 16 நாட்களைக் கடந்து இருந்தது. ஊதியம்  பெறாத தொழிலாளர்கள் 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். குறைந்த பட்ச கூலி சட்டத்தின்படி ஊதியம் வழங்க  வேண்டும். பணித் தொடர்ச்சியுடன் வேலை  வழங்க வேண்டுமென போராட்டத்தில் ஈடு பட்டிருந்தனர். இதையடுத்து தூய்மை தொழி லாளர்களுக்கு ஆதரவாக, சிஐடியு ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், போராட் டக்குழுவினருடன், ஆணையாளர் பொறுப்பு வகிக்கும் பொறியாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு, மூன்று கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், புதனன்று மாலை சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதன் படி தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப் பட்ட ஏப்ரல் மாதம் ஊதியம் வழங்கப்பட்டது. ஊதியம் குறைக்கப்படாது. மேலும் 8 மணி நேர வேலை உத்தரவாதப்படுத்தப்படும்  எனக் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து  வியாழனன்று வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு வழக்கம்போல் தொழிலாளர் கள் வேலைக்குத் திரும்பினர்.