தருமபுரி, மே 28- தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளதால், பேருந்து நிலை யத்தை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி நகராட்சிக்குட்பட்ட புறநகர் மற் றும் நகர் பேருந்து நிலையம் 1980 ஆம் ஆண்டு 5.25 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் ஒருபுறம் புறநகர் பேருந்து நிலையமும், மறுபுறம் நகர பேருந்து நிலையமும் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையம் 40 ஆண்டுகள் கடந்த நிலையில், நகர பேருந்து நிலையம் சேதமடைந்தது. மேலும், போக்குவரத்து அதிகரித்தது. காலப் போக்கில் சாலை வசதிகள் மேம்படுத்தப் பட்டதால் பேருந்து நிலையம் தாழ்வான பகு தியில் உள்ளது. இதனால் தருமபுரியில் சிறு மழை பெய்தாலும், பேருந்து நிலையத்திற் குள் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. மேலும், நகர பேருந்து நிலையத்தில் உரிய கழிவுநீர் கால்வாய்கள் இல்லாததால், கடை களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பயணி கள் நிற்குமிடம் என பேருந்து நிலையத்தின் பல பகுதிகளிலும் கழிவுநீர் தேங்குகின்றது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை உருவாகி யுள்ளது. கழிவுநீர் வெளியில் செல்ல வழி யில்லாததால் கொசு, ஈ உற்பத்தியாகி சுகா தார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தப்படும் என தமிழ் நாடு அரசு அறிவித்து பல மாதங்களாகியும் மேம்பாடு பணிகள் துவங்கவில்லை. எனவே, பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணியை துவங்க மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.