தருமபுரி, டிச.21 விவசாயிகளின் நீராதாரமாக விளங்கும் சனத்குமார் நதியை தூர் வாரி, கழிவுநீர் மற்றும் ரசாயன கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர். தருமபுரி மாவட்டம், வத்தல்மலை அடிவாரம், தின்னஅள்ளியில் தொடங்கி சோழராயன் ஏரி, அதியமான் கோட்டை ஏரி, ஏமகுட்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஏரி, கிணறு களுக்கு நீர் ஆதாரத்தை சனத்குமார் நதி வழங்கி வருகிறது. சுமார் 42.84 கிலோ மீட்டர் பயணித்து, கம்பை நல்லூர் அருகே கூடுதுறைப்பட்டியில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. இந்த நதியில் 1960 ஆம் ஆண்டு முழு வதும் தண்ணீர் சென்று கொண்டி ருந்தது. வறட்சியால் நீர்வரத்து குறைந்த நிலையில், ஆக்கிரமிப்பு காரணமாக ஆற்றின் பயணம் சுருங் கியது. இதனால், மழைக்காலங்களில் மட்டும் தண்ணீர் செல்லும் நதியாக மாறியது. தற்போது, தருமபுரி நகராட்சியின் கழிவுநீரும், தறி மற்றும் சாயப் பட்டறையின் தண்ணீரும் சனத்குமார் நதியில் நேரடியாக கலப்பதால் தண்ணீர் மாசுபட்டு கருப்பு நிறத்தில் செல்கிறது.
இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு தண்ணீர் மாசடைந்துவிட்டது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் மகசூல் பாதிக்கப்படுகிறது. மேலும், ஆக்கிரமிப்பால் நதியின் பரப்பளவு சுருங்கி காணப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் சனத் குமார் நதியை தூர்வார ரூ.50 கோடி நிதி ஒதுக்கி பணி துவக்க விழா நடை பெற்றது. பின்னர் கிடப்பில் போடப் பட்டது. விவசாயிகளின் நலன் கருதி சனத் குமார் நதியை தூர்வார நிதி ஒதுக்கி பணி துவங்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கலப்பதையும், ராச யன கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் ஏ.குமார், ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப் பினர் கே.பூபதி மற்றும் ரவி, மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.