சிஐடியு மறியல் தருமபுரி, அக்.1- சங்கத்தில் சேரும் உரிமையை மறுக்கும் சாம்சங் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத் தில் ஈடுபட்டு வரும் அந்நிறுவன தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர். சாம்சங் நிறுவனம் தொழிலா ளர் நலச்சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். சங்கத்தில் சேரும் உரி மையை மறுக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ் சிபுரம் அருகே உள்ள சாம்சங் இந்திய நிறுவனத்தில் பணியாற் றும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சனையில் அரசு விரைந்து தலையிட்டு, இந்திய அரசியல் சட் டங்களை மதித்து நடக்க வேண்டும் என சாம்சங் நிறுவனத்திற்கு தமிழ் நாடு அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியும், போராட்டத் தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்க ளுக்கு ஆதரவாகவும், தமிழ்நாடு முழுவதும் சிஐடியு சங்கத்தி னர் செவ்வாயன்று மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போராட்டக்காரர்களை காவல் துறையினர்கைது செய்தனர். அதன்படி, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே இருந்து, சங்கத்தின் மாநிலச் செயலாளர் சி.நாகராசன் தலைமையில் பேர ணியாக வந்த சிஐடியுவினர், தலைமை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.கலாவதி, ஜி.நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சண்மு கம், சி.அங்கம்மாள், சி.ரகுபதி, ஆனஸ்ட்ராஜ் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவரும் கைது செய்யப்பட்ட னர்.
கோவை
சிஐடியு கோவை மாவட்டக்குழு சார்பில், காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன் தலைமை வகித்தார். சிபிஎம் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி போராட் டத்தை துவக்கி வைத்தார். கோரிக் கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலு சாமி ஆகியோர் உரையாற்றினர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், கோவை மாமன்றக் குழு தலைவர் வி.இராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பி னர்கள் கனகராஜ், ஜான் அந்தோ ணிராஜ், கே.ரத்தினகுமார் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு அரசு மருத்துவமனை அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, சிஐடியு மாவட் டச் செயலாளர் எச்.ஸ்ரீராம் தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலை வர் எஸ்.சுப்ரமணியன், உதவித் தலைவர்கள் ஆர்.ரகுராமன், என். முருகையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் பழைய பேருந்து நிலை யம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு, சிஐடியு சாலைப் போக்கு வரத்து சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எ.கோவிந் தன், மாவட்டத் தலைவர் டி.உதயகு மார், மாவட்டப் பொருளாளர் வி.இளங்கோ, மாவட்ட நிர்வா கிகள் ஆர்.வெங்கடபதி, பி.பன்னீர் செல்வம், பி.விஜயலட்சுமி, கே. சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
திருப்பூரில் தியாகி குமரன் நினைவகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, சிஐடியு மாவட் டத் தலைவர் சி.மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் போராட்டத்தை பற்றி விளக்கி கூறினார். இதில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் சம் மேளன பொதுச்செயலாளர் டி.குமார், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஜி.சம்பத் உட்பட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல் வேறு தொழில்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டம், கூடலூரில் சிஐடியு மாவட்ட துணைச்செயலா ளர் எம்.ஆர்.சுரேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத்தலைவர் ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கேசினி ரோஜா, கே.ஜே.வர்கீஸ், பிரசாந்தினி, பெரியார் மணிகண் டன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குஞ்சு முகமது, மாவட் டக்குழு உறுப்பினர்கள் சி.கே.மணி, வர்கீஸ், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.வாசு, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பன்னீர் செல்வம், வாலிபர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராசி.ரவிக்கு மார், தேயிலை தோட்டத் தொழிலா ளர் சங்க மாவட்டப் பொருளாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண் டனர். இதேபோன்று, உதகை மற்றும் குன்னூர் பகுதிகளில் நடை பெற்ற போராட்டங்களில், சிஐடியு மாவட்டத் தலைவர் எல்.சங்கர லிங்கம், மாவட்டச் செயலாளர் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல்லில் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, சிஐடியு மாவட் டத் தலைவர் எம்.அசோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் என்.வேலுசாமி கோரிக் கைகளை விளக்கி உரையாற்றி னார். இதில் மாவட்ட நிர்வாகிகள் எம்.ரங்கசாமி, கே.மோகன், செங் கோடன், கு.சிவராஜ், ரேவதி, வரத ராஜன், ஜெயக்கொடி, கண்ணன், ஜெயராமன் மற்றும் துறைவாரி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.
சாம்சங் செல்போன்கள் உடைப்பு
திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், சாம்சங் பன்னாட்டு நிறுவனத்தின் தொழிற்சங்க விரோத போக்கை கண்டித்தும், தொழிலாளர்க ளின் நியாயமான உரிமைகளை நிலை நாட்டுவதற்கு வலியுறுத்தி சாம்சங் நிறு வன செல்போன்களை சாலையில் போட்டு உடைத்து நொறுக்கினர். இதை யடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர் களை கைது செய்த காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் கொண்டு சென்று அடைத்தனர். அங்கு ஓய்வுபெற்ற ஊழி யர்கள் சங்கத்தின் சார்பில் அ.நிசார் அகமது, பா.சௌந்தரபாண்டி யன் உள்ளிட்டோர் சாம்சங் இந்திய நிறுவனத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தங்கள் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதத்தில், ஓய்வூ தியர் சங்கத்தின் சார்பில் ரூ.2700 நிதி வழங்கினர். அத்துடன் மறியலில் பங்கேற்று கைதான பல்வேறு துறை வாரி தொழிற்சங்கத்தின் சார்பி லும், சாம்சங் தொழிலாளர்களுக்காக ரூ.8900 வழங்கினர். போராட் டக் களத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.11 ஆயிரத்து 600 சாம்சங் இந்தியா தொழிலாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று சிஐ டியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தெரிவித்தார்.