districts

img

தோழர் சிங்காரவேலருக்கு செவ்வஞ்சலி

பென்னாகரம், பிப்.13- பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே, தென்னிந்தியாவின் முதல் கம்யூ னிஸ்ட் தோழர் சிங்காரவேலரின் 77 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவில் முதல் உழைப்பாளர் தின மான மே தினத்தை கொண்டாடியவரும், தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமையா ளருமான தோழர் சிங்காரவேலரின் 77 ஆம் ஆண்டு நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில், பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிபிஎம் பகுதி செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார். சக்திவேல்  முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன் சிறப்புரையாற்றி னார். இதில், வாலிபர் சங்க மாவட்ட பொருளா ளர் சிலம்பரசன், விவசாய தொழிலாளர் சங்க  பகுதி தலைவர் சின்னராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி சிவாஜி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க கரியப்பனஅள்ளி கிளை  தலைவர் குப்புசாமி உட்பட பலர் கலந்து  கொண்டு சிங்காரவேலர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர்.