districts

img

சேலம் உருக்காலை தொழிற்சங்க அங்கீகார தேர்தல்

சேலம், ஜூலை 23-  சேலம் உருக்காலை சிஐடியு  தொழிற்சங்க அங்கீகார தேர்தல் பிரச் சார கூட்டம் சேலம் உருக்காலை வளாகத்தில் உள்ள சமுதாய கூடத் தில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பங்கேற்றார். சேலம் உருக்காலை தொழிற் சங்க அங்கீகார தேர்தல் வரும் ஜூலை  27ஆம் தேதி நடைபெற உள்ளது. சேலம் உருக்காலையில் மொத்தம் 651 நிரந்தர ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவ ரும் நடைபெற உள்ள தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். சேலம் உருக்காலையை பொதுத் துறை நிறுவனமாக தொடர பல கட்ட  போராட்டங்களை நடத்தி வரும் சிஐ டியு தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க  வேண்டும். ஊதிய ஒப்பந்தம்,  நிலு வையில் உள்ள ஆலை மட்ட பிரச்ச னைகள் மற்றும் பணியமர்த்தல் உள் ளிட்ட கோரிக்கைகளை வென்றெ டுக்க சிஐடியு தொழிற்சங்கத்திற்கு தொழிலாளர்கள் ஆதரவு தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என  தொழிலாளர்கள் மத்தியில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் உரையாற்றினார்.

 முன்னதாக சிஐடியு மாவட்ட தலைவர் பி. பன்னீர்செல்வம் தலை மையில் நடைபெற்ற நிகழ்வில், உருக்காலை வளாகத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தேர்தல் பிரச்சார  கூட்டம் துவங்கியது. இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், மாநில துணைத்தலைவர் ஆர்.சிங் காரவேல், சாலைப் போக்குவரத்து தொழிற்சங்க மாநில துணைத்தலை வர் எஸ்.கே.தியாகராஜன், மாநில குழு உறுப்பினர்கள் எ.கோவிந்தன், ஆர்.வைரமணி, சிஐடியு மாவட்ட பொருளாளர் வி. இளங்கோ மற்றும்  சேலம் உருக்காலை சிஐடியு தொழிற் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர்.  சேலம் உருக்காலை தொழிற் சங்க அங்கீகார தேர்தல்இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறு வது குறிப்பிடத்தக்கது.