districts

img

சேலம் மாநகராட்சி கண்டித்து வாலிபர் சங்கம் நூதன ஆர்ப்பாட்டம்

சேலம், ஏப்.4- முறையாக குடிநீர் விநியோகம் செய்யாத சேலம் மாநக ராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இதில், 47 ஆவது வார்டுக்குட்பட்ட முருகன் நகர் பகுதியில் பொது  குடிநீர் குழாய் உடைந்து, 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கேட்டதற்கு, தனிநபர் குழாய் அமைத்துக் கொள்ளுங்கள் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்ட பிரச் சனை குறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மாந கராட்சி 47 ஆவது வார்டு கவுன்சிலர் கண்டித்தும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்ட போராட் டக்காரர்கள் காலி குடங்களை தலையில் ஏந்தி, வாயில் கருப்பு துணிகளை கட்டி முழக்கங்களை எழுப்பினர். இதில் வாலிபர் சங்க நிர்வாகி பிரபாகரன் உள்ளிட்ட அப்பகுதி பொது மக்கள் பலர் பங்கேற்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது.