districts

img

சேலம் ஜல்லிக்கட்டு: 600 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்பு

சேலம், மே 21- சேலம் அருகே உள்ள நிலவாரப் பட்டில் ஞாயிறன்று நடைபெற்ற ஜல் லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். சேலம் மாவட்டம், பனமரத்துப் பட்டி ஊராட்சி ஒன்றியம், நிலவாரப் பட்டியில் ஞாயிறன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் கொடிய சைத்து தொடங்கி வைத்தார். இப் போட்டியில் பல்வேறு ஊர்களிலி ருந்து 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற் கொண்ட பின்னரே போட்டியில் பங் கேற்க அனுமதி வழங்கப்பட்டது. 108 அவசர சிகிச்சை வாகனம், காவல் துறை பாதுகாப்பு, பார்வையாளர்க ளுக்கான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள் ளப்பட்டுள்ளன. நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில், ஜல்லிக் கட்டு போட்டி முழுவதையும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும், விழாக்குழு உறுப்பி னர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் அரசின் அனைத்து விதிமுறைகளை யும் முழுமையாகக் கடைபிடித்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள் ளப்பட்டது. முன்னதாக, ஜல்லிக் கட்டு போட்டியில் அரசு விதிமுறை கள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியினை மாவட்ட ஆட்சி யர் வாசிக்க, மாடுபிடி வீரர்கள் அனை வரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட னர்.  இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.சிவகுமார், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவ லிங்கம், சேலம் வருவாய் கோட்டாட் சியர் (பொ) சி.மாறன், பனமரத்துப் பட்டி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் சுரேஷ்குமார், தமிழ்நாடு ஜல்லிக் கட்டு பேரவைத் தலைவர் பி.இராஜ சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.