சேலம், ஜூன் 3- சேலம் பட்டாசு ஆலை விபத்தில் படு காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் களில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இத னால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான் காக உயர்ந்துள்ளது. சேலம், இரும்பாலை அருகே சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் சதீஷ்குமார் கந்த சாமி இருவரும் நாட்டு வெடி தயாரிக் கும் ஆலை நடத்தி வந்தனர். பட்டாசு குடோனில் அதே பகுதியை சேர்ந்த 9 பேர் பட்டாசு தயாரிப்பு பணி ஈடுபட்டு வந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பட்டாசு ஆலையில் பயங்கர வெட்டி சத்தத்துடன் விபத்து ஏற்பட்டது. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த அனைவரும் தூக்கி வீசப் பட்டு படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் உரிமையாளர் சதீஷ் குமார், சடையாண்டி ஊரை சேர்ந்த நடேசன் பழனிச்சாமி, மனைவி பானுமதி ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். இதில், மஜ்ரா சொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த மகேஸ்வரி, மோகனா, வசந்தா, மணிமேகலை, பிரபாகரன், பிருந்தா ஆகிய ஆறு பேர் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன் சனியன்று உயிரிழந்தார். இத னால், பலி எண்ணிக்கை நான்காக உயர்ந் துள்ளது. மேலும், ஐந்து பேருக்கு மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இந்த விபத்து குறித்து காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.