சேலம், மே 7- பள்ளி பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னர் ஏற்காடு கோடைவிழா நடத்தப் படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பேரூராட்சி பகுதியில் சனியன்று மக் களை தேடி மருத்துவ திட்ட முகாம் நடைபெற்றது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தலைமை யில் சுகதாராப்பணிகள் துணை இயக் குநர் நளினி மற்றும் மருத்துவக்குழுவி னர் வீடு, வீடாக சென்று மக்களை பரி சோதித்து சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சி யர் கார்மேகம் கூறியதாவது, தமிழகத் தில் புதிய அரசு அமைந்தபின் கடந்த ஒரு ஆண்டில் பல்வேறு திட்டப்பணி கள் செய்யப்பட்டுள்ளன. மக்களை தேடிச்சென்று மருத்துவம் பார்க்கும் திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத் தில் இதுவரையில் 3 லட்சத்து 10 ஆயி ரத்து 661 பேர் பயனடைந்துள்ளனர். இதுபோக 3 லட்சத்து 74 ஆயிரத்து 647 பேர் தொடர் சேவையை பெற்று வரு கின்றனர். மேலும், பல்வேறு கோரிக் கைகளை நிறைவேற்றக்கோரி பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறைதீர்க்கும் முகாம், முதல்வரின் முகவரி அலுவலகம், மக்கள் பிரதிநிதி களிடம் வழங்கப்பட்ட மனுக்கள் ஆகி யவற்றின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டா லின் 110 விதியின் கீழ் அறிவித்த திட் டங்களும், துறைவாரியாக மானிய கோரிக்கைகளில் அறிவிக்கப்படும் திட்டங்களும் விரைவில் நடை முறைக்கு கொண்டு வரப்படுகிறது.
சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை அரசுக்கு தெரிவித்திருக்கி றோம். விரைவில் திட்டப்பணிகள் தொடங் கப்பட உள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்ப பூங்கா, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தலைவாசல் கால்நடை பூங்கா திட்டப்பணி ஜூன் மாத இறுதிக்குள் முழுமையாக முடிக்க அறிவுறுத்தப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதா மல் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து, அவர்களின் வீடு தேடிச் சென்று விசாரிக்க, இல்லம் தேடி கல் வித்திட்ட தன்னார்வலர்களை நியமித் துள்ளோம். ஏன் தேர்வு எழுதவில்லை என்ற காரணத்தை கேட்டறிந்து, அந்த மாணவர்களை தொடர்ந்து தேர்வு எழுத வைக்க முயற்சி செய்து வருகி றோம். விடுபட்ட தேர்வை துணை தேர்வு நடக்கும்போது எழுத செய் வோம் என்றார். மேலும், மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக சரிவடையும். ஆனால், நடப் பாண்டு 104 அடியிலிருந்து 106 அடி யாக உயர்ந்துள்ளது. இது சேலம் மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி டெல்டா விவசாயிகளையும் மகிழ்ச்சி யடைச் செய்துள்ளது. ஏற்காடு கோடை விழாவை பள்ளி பொதுத்தேர்வுகள் முடிந்தபின் நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளது. இதற்காக உத்தேச தேதியை மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே. என்.நேருவிடம் கொடுத்து இருக்கி றோம். இதுதொடர்பாக அவர், முதல்வ ருடன் ஆலோசித்து, ஏற்காடு கோடை விழா நடத்தப்படும் வழக்கமான நாட் களைவிட கூடுதல் நாட்கள் நடத்த விரி வான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.