districts

img

சேலம்: ரேசன் அரிசி கடத்திய வாகனம் சிறைபிடிப்பு

அதிகாரிகளின் துணையோடு அரிசி கடத்தல்?

சேலம் மாநகரில் ரேசன் அரிசி கடத்தப்படுவது தொடர்கதை யாக இருந்து வருகிறது. குறிப்பாக, அரசு அதிகாரிகளின் துணை யோடு இந்த கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது. மேலும், ரேசன் அரிசியை பிடித்து காவல் நிலை யத்தில் ஒப்படைக்கும் நபர் மீதே பொய் வழக்கு போடும் நிலை  இருந்து வருவதாகவும், கடந்த காலங்களில் ரேசன் அரிசி கடத்திய வரை பிடித்துக் கொடுத்த வாலிபர் சங்க நிர்வாகிகள் மீதே பல முறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு  எழுந்துள்ளது. எனவே, சேலம் மாநகரில் தொடர்ச்சியாக நடை பெற்று வரும், ரேசன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சேலம், மார்ச் 11- அன்னதானப்பட்டி அருகே ரேசன் அரிசியை கடத்திய வாக னத்தை வாலிபர் சங்கத்தினர் சிறைப்பிடித்து காவல் துறையின ரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாநகரம், அன்னதானப் பட்டி எல்லையம்மாள் ஏரி சாலை பகுதியில் உள்ள நியாய விலைக் கடை அருகில் ரேசன் அரிசியை நான்கு சக்கர வாகனத்தில் கடத் திக் கொண்டிருப்பதாக அப் பகுதியைச் சேர்ந்த வாலிபர் சங் கத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வாலி பர் சங்கத்தினர் மேற்குறிப்பிட்ட வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது, வாகனத்தின் ஓட்டுநர் சிவக்குமார் என்பவர் திடீரென வாலிபர் சங்கத்தினர் மீது வாக னத்தை ஏற்ற முயற்சித்துள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து சம்பவ இடத் திற்கு காவல் துறையினர் வந்த  நிலையில், ரேசன் அரிசி கடத்த லில் ஈடுபட்ட இருவர் தப்பி யோடினர். இதைத்தொடர்ந்து, அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாக னத்தையும், வாகன ஓட்டுநர் சிவக் குமாரையும், காவல் நிலையத் துக்கு அழைத்துச் சென்று விசா ரணை மேற்கொண்டு வருகின்ற னர். முன்னதாக, இப்போராட்டத் தில் வாலிபர் சங்க கிழக்கு மாநகர செயலாளர் பெரியசாமி, வீரமணி  மற்றும் அப்பகுதி பொதுமக்கள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

18.3 டன் அரிசி பறிமுதல்

இதேபோல், சங்ககிரி பகுதி யில் ரேசன் அரிசி கடத்தப்படுவ தாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையின ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து துணை காவல் கண் காணிப்பாளர் கிருஷ்ணன் மேற் பார்வையில், ஆய்வாளர் பால முருகன் தலைமையில் காவலர் கள் வியாழனன்று காலை சங்க கிரி அருகேயுள்ள சன்னியாசிபட்டி ரயில்வே கேட் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப் போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், 196 மூட்டை களில், 9.8 டன் ரேசன் அரிசியும், 254 மூட்டைகளில் 8.6 டன் ரேசன் அரிசி குருணையும் கடத்தி வந்தது கண்ட றியப்பட்டது. இதையடுத்து லாரியு டன், 18.3 டன் அரிசியை பறிமுதல் செய்த காவல் துறையினர், லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் நாமக்கல் மாவட் டம், கீரனூரைச் சேர்ந்த பாரத்  (24) என்பதும், தருமபுரி மாவட் டத்திலிருந்து திருப்பூர் மாவட்டத் தில் உள்ள கோழிப்பண்ணைக்கு அரிசி கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், குறைந்த விலைக்கு ரேசன் அரி சியை வாங்கி கடத்திய திருப்பூ ரைச் சேர்ந்த நடராஜ், லாரி உரி மையாளர் சேலம் ராமச்சந்திரன் ஆகியோரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.