நாமக்கல், மே 21- சட்டவிரோதமாக நிலத்தடி நீரை விற்பனைக்கு பயன்படுத்தி வந்ததை கண்டறிந்து, ஆழ்துளை கிணற்றின் குடிநீர் குழாய் இணைப் புகளை அதிகாரிகள் துண்டித்து சீல் வைத்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. காவிரி ஆற்றங்கரையோரம் ஏராளமான விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின் றனர். மேலும், குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக காவிரி ஆற்று நீரை பயன்படுத்தி வருகின்ற னர். காவிரியில் தற்பொழுது நீர்வ ரத்து குறைந்த உள்ளது. இந்நிலை யில், ஆற்று கரையோர பகுதி உள்ள களியனூர் கிராமத்தில், விவசாயத்திற்கு நீரை பயன்படுத்து வதாக கூறி, நில உரிமையாளர்கள் சிலர் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலமாக நிலத்தடி நீரை தினசரி டேங்கர் லாரிகள் மூலம் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதி, கல்லூரிகளுக்கும், வணிக, வர்த்தக, நிறுவனங்களுக்கு விற்ப னை செய்வதாக புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், நீர்வளத் துறை நீர் நிலை கோட்ட சேலம் செயற்பொறியாளர் தலை மையில், களியனுர் கிராமத்தில் சங்கர், சிவசுப்பிரமணி, தெய்வ சிகாமணி, பூபதி, சம்பூரணம், உள்ளிட்டோருக்கு சொந்த மான இடத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை விற்பனைக்கு பய ன்படுத்தி வந்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து, ஆழ்துளை கிணற் றின் குடிநீர் குழாய் இணைப்பு களை அதிகாரிகள் துண்டித்து சீல் வைத்தனர். இது சமய சங்கிலி மற்றும் கலியனூர் கிராமங்களில் மொத்தமாக 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலத்தடி நீர் இணைப்பு குழாய் துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, காவிரி ஆற்றில் விவசாயத்திற்காக நீர் எடுக்க அனு மதி பெற்று, தண்ணீரை தினமும் லாரிகளில் கொண்டு சென்று விற்பனை செய்வது குறித்து விரை யில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற னர்.