கோவை, டிச.4- கோவை விமான நிலையத்தில், மகளிர் சுய உதவிக்குழுவின் பொருட்கள் விற்பனை செய்யப்படுமென ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர் களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறு கையில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களில் நடைபெற்று வரும் பணிகள், மக்கள் பிரதிநிதிகளின் தேவைகள் குறித்து ஆய்வு பணிகளை மேற் கொண்டு வருகிறோம். வெள்ளியன்று ஈரோடு மாவட்டத்திலும், சனியன்று கோவை மாவட்டத்திலும் ஆய்வு பணிகளை மேற்கொண்டோம். கோவையில் இன்னும் பல்வேறு திட்டப்பணிகள் துவங்கி வைக்கப்பட்டது. நிறைவு பெற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை இதுவரை வீதிகளில் தான் விற்பனை செய்யப்பட்டன. தற்போது, விமான நிலையத்தில் விற்ப னைக்கு அரங்கம் அமைக்கப்படும். இத னால், சுய உதவிக்குழு தயாரிப்புகள் தரமான தாக இருக்கிறது என்பதற்கு ஒரு சான்றாகும். மேலும்,மகளிர் சுய உதவி குழுக்கள் உற் பத்தி செய்யக்கூடிய பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும் என தெரிவித்தார்.