districts

img

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மண் பானை விற்பனை

உடுமலை, ஜன.13- பொங்கல் பண்டிகை ஒருவார காலம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மண் பானை, கரும்பு, கோலப்பொடி, ஆவா ரம்பூ மற்றும் பூலைப்பூ விற்பனை உடுமலை பகுதிகளில் சூடு  பிடித்துள்ளது. உடுமலை நகரம் இயற்கையாகவே கிராமங்கள் கொண்ட  பகுதியாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளதால்  பொங்கல் விழா சிறப்பாக நடைபெறும். இந்நாட்களில் கிராம  மக்கள் பொருள்கள் வாங்க மற்றும் விற்பனை செய்ய உடு மலை நகருக்கு வருவதால் நகரம் பரபரப்பாக இருக்கும். பொங்கல் விழாவிற்கு தேவையான மண்பானை, கரும்பு, மஞ்சள், கோலப்பொடி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யச் சிறு வியாபாரிகள் முக்கிய வீதிகளில் கடை வைத் துள்ளார்கள். இதில், இரண்டு கரும்பின் விலை ரூ.100க்கும்,  மஞ்சள் ரூ.60க்கும் மண்பானை ரூ.100 முதல் விற்பனை செய் யப்பட்டு வருகிறது. நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத  வகையில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார் கள்.