districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா வாகனங்களை பதிவு செய்ய எஸ்.பி. உத்தரவு

நாமக்கல், ஜூலை 31- கொல்லிமலை வல்வில் ஓரி விழாவில் பங்கேற்க வரு வோர் தங்களது வாகனங்களை காவல் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், கொல்லிமலையில் வரும் ஆகஸ்ட் 2, 3 ஆகிய தேதிக ளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் வாகனங்களில் வரும் நாமக்கல் மாவட்டம், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் முறையான தகவல் (வாகனத்தின் விவ ரம், நிகழ்ச்சியில் கலந்து கொள்பவா்கள், பாதையின் விவரம்) தெரிவிக்க வேண்டும். வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சேலம் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதன் சந்தை, நைனாமலை, துத்திக்குளம், காரவள்ளி சோதனை சாவடி வழியாக மட்டுமே செல்ல வேண்டும். பிற வழிக ளில் செல்ல அனுமதியில்லை. வல்வில் ஓரி விழா முடித்து கீழே இறங்குபவர்கள் செம்மேடு, செங்கரை, முள்ளுக்கு றிச்சி சோதனைச்சாவடி வழியாக சேந்தமங்கலம் பிரிவு சாலை, அணைப்பாளையம் புறவழிச்சாலை வழியாக சேலம்  - கரூர் தேசிய நெடுஞ்சாலையை சென்றடைய வேண்டும். இரு சக்கர வாகனத்தில் வருவதற்கு அனுமதியில்லை. நான்கு சக்கர வாகனத்தில் வருபவர்கள் யாரும் அமைப்புகள் சார்ந்த கொடிகள், பேனர் மற்றும் உருவப்படம் ஆகியவற்றை வாக னத்தில் கட்டியோ, கையிலோ கொண்டு செல்லக்கூடாது. ஒலி பெருக்கி உபயோகிக்கக்கூடாது. விழாவுக்கு வரும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உரிய அனுமதி சீட்டு பெற்று அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில்தான் வர வேண்டும். அனுமதி பெற்று மேலே செல்லும் வாகனம் 3 மணி நேரத்தில் கீழே இறங்கி விட வேண்டும். இவ்விழாவிற்கு வருபவர்கள், அரசியல் கட்சி, சாதி அமைப்பு மற்றும் ஏனைய அமைப்பைச் சார்ந்த தலை வர்களையோ மற்றும் அலுவலர்களையோ சுட்டிக்காட்டியோ அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகை யில் நடந்துக் கொள்ளக்கூடாது. போக்குவரத்து விதி களை மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். கார வள்ளி, முள்ளுக்குறிச்சி சோதனைச்சாவடிகளில் காவல் துறை, வருவாய்த்துறை, வனத்துறை, வட்டார போக்குவ ரத்து அலுவலர்கள் உரிய சோதனை செய்த பிறகே வாகனங்களை அனுப்புவார்கள் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. '

மானிய விலையில் சோளம் விதைகள்

மானிய விலையில் சோளம் விதைகள் நாமக்கல், ஜூலை 31- மாற்றுப்பயிர் திட்டத்தில் மானிய விலையில் விவசாயி களுக்கு சோள விதைகள் விநியோகிக்கப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயமணி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர் திட்டத்தில் 4 கிலோ சோளம், 5 கிலோ சிறுதானிய நுண்ணூட்ட இடுபொருட்கள், அரை லிட்டர் அசோஸ்பை ரில்லம், ஒரு கிலோ விரிடி, அரைகிலோ பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றின் முழுவிலை ரூ.1,228.70 ஆகும். இது விவசா யிகளுக்கு ரூ.1,220 மானியம் போக ஜிஎஸ்டியுடன் ரூ.94க்கு வழங்கப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ரூ.63 விலையுள்ள ஒரு கிலோ சோளம், ரூ.30 மானியம் போக விவசாயிகளுக்கு ரூ.33க்கு வழங்கப்ப டுகிறது. சிறுதானிய உற்பத்தி இயக்க திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ சோளம், ஐந்து கிலோ நுண்ணூட் டங்கள், தலா அரை லிட்டர் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றின் முழு விலை ரூ.2446.76. இதை விவசாயிகளுக்கு ரூ.1,500 மானியம் போக பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ரூ.947க்கும், ஆதிதிராவிடர் விவசாயி களுக்கு ரூ.2,100 மானியம் போக ரூ.347க்கும் வழங்கப் படுகிறதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசநோய் வில்லைகள் விற்பனையில், 12 ஆண்டுகளாக சேலம் மாவட்டம் முதலிடம்

சேலம், ஜூலை 31- காசநோய் வில்லைகள் விற்பனையில் மாநில அளவில் சேலம் மாவட்டம், தொடர்ந்து 12 ஆவது ஆண்டாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 74 ஆவது தொகுதி காசநோய் வில்லைகள் வெளி யீட்டு விழா மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தலை மையில் திங்களன்று நடைபெற்றது. அப்போது அவர் பேசு கையில், மாநில அளவில் காசநோய் வில்லைகள் விற்பனை யில் கடந்த 12 ஆண்டுகளாக சேலம் மாவட்ட காசநோய் தடுப்புக் கழகம் முதலிடம் வகித்து வருகிறது. கடந்தாண்டு சேலம் மாவட்டத்தில் ரூ.15.03 லட்சம் மதிப்புள்ள காச நோய் வில்லைகள் விற்பனை செய்யப்பட்டு முழு இலக்கு எட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் முழு இலக் க்கினை அடைந்த சேலம் மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு முதல் பரிசும், நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குநருக்கு இரண்டாம் பரிசும், தாரமங்கலம் மாவட்ட கல்வி அலுவலருக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டன. நுரை யீரல் பாதிப்பு காசநோய் தொற்றுள்ள நபா் இரு மும்போது காற்றின் மூலமாக அருகில் உள்ள நபருக்கு  காசநோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே,  காசநோயாளிகள் இருமும்போது கைகுட்டை பயன்ப டுத்துதல் வேண்டும். குறிப்பாக, ஆறு மாதங்களுக்கு முறை யாக காசநோய்க்கான கூட்டு மருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக புரத சத்துள்ள ஆரோக்கியமான உணவு வகைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் காசநோ யிலிருந்து முழுமையாகக் குணமடையலாம், என்றார்.

ரூ.35 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

நாமக்கல், ஜூலை 31- நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செவ்வாயன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் 1,430 மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் ஆர்சிஎச் ரகப்பருத்தி குவிண்டால் ஒன்று ரூ.7,511க்கும், மட்டரகம் ரூ.4,955க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.35 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

மண்டல துப்பாக்கிச் சுடும் போட்டி: சேலம் காவல் ஆணையர் முதலிடம்

மண்டல துப்பாக்கிச் சுடும் போட்டி: சேலம் காவல் ஆணையர் முதலிடம் சேலம், ஜூலை 31- சேலத்தில் நடைபெற்ற காவல் துறையினருக்கான மேற்கு மண்டல அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில், சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமார் அபினபு முதலிடம் பிடித்தார். காவல் துறையில் பணிபுரியும் உயரதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் துப்பாக்கிச் சுடும் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு சேலம் மேற்கு மண்டல காவல்துறை உயரதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி சூரமங்கலம் நகரமலை அடிவாரத்தில் செவ்வா யன்று நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர், காவல் துறை தலைவர், துணைத்தலைவர் ஆகியோ ருக்கான போட்டியில், 9 எம்.எம். (துப்பாக்கி) பிரிவில், மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபு முதலிடம் பிடித் தார். ஈரோடு காவல் கண்காணிப்பாளர் ஜவகர் இரண்டாம் இடத்தையும், சேலம் காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இன்சாஸ் (தானி யங்கி) பிரிவில் சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு முதலிடம் பிடித்தார். காவல் துணை கண்கா ணிப்பாளர்களுக்கான போட்டியில், 9 எம்எம் (துப்பாக்கி) பிரிவில் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் வினோத் முதல் பரிசை வென்றார். திருப்பூர் துணை ஆணையர் அனில்கு மார் இரண்டாம் பரிசையும், சேலம் ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் அமலா அட்வின் மூன்றாம் பரிசையும் பெற்றனர். 

தெரு நாயை கட்டுப்படுத்தக் கோரிக்கை

தெரு நாயை கட்டுப்படுத்தக் கோரிக்கை அவிநாசி, ஜூலை 31- எம்ஜிஆர், என்.எஸ்.பி குடியிருப்போர் நல சங்கத்தினர் அளித்த கோரிக்கை மனுவில், அப்பகுதியில் 300க்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு தினமும் காலை மாலை  வேளைகளில் மகளிர், சிறுவர்கள் மற்றும் ஆண்கள் நடை  பயிற்சி மேற்கொள்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் கூட்டம் அதிகளவில் உள்ளது. பல இடங்க ளில் 10க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக சேர்ந்து நடைப யிற்சி மேற்கொள்வோரை, குறிப்பாக குழந்தைகளை, வாக னத்தில் செல்பவர்களை துரத்துவது வாடிக்கையாக உள் ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்பாக ஒரு சிறுமி வீட்டி லிருந்து தெருவிற்கு வந்தபொழுது 10க்கும் மேற்பட்ட நாய் கள் கடிப்பதற்கு சூழ்ந்து கொண்டது அந்த நேரத்தில் அருகில்  இருந்த முதியவர் ஒருவர் அந்த நாய்களை துரத்துவதற்கு முயற்சி செய்தபோது அவரையும் சூழ்ந்து கொண்டு நாய்கள்  கடிப்பதற்கு துரத்தியபோது கீழே விழுந்து கை கால்க ளில் காயம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார். மேலும் இவர் இதய நோய்க்கு சிகிச்சை எடுத்தவர். இருப்பி னும் பெரிய அளவில் பாதிப்பில்லை. இதன் காரணமாக  குழந்தைகளும் காலை மாலை நேரங்களில் வீதிகளில் விளை யாட முடிவதில்லை தொடர்ந்து இந்த பகுதிகளில் நாய்க ளின் தொல்லைகள் அதிகமாக இருக்கின்றது, எதிர்வரும் காலங்களில் பெரும் துயரச்சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்  நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துமாறு மனுவில்  கூறியிருந்தனர். இம் மனுவை பெற்றுக் கொண்ட ஆணை யர் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

உடுமலையில் இன்று மின்தடை

உடுமலையில் இன்று மின்தடை உடுமலை, ஜூலை 31- உடுமலைப்பேட்டை நகரம், பழனி பாதை, தங்கமாள் ஓடை, இராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர்.வேலூர்,  கணபதிபாளையம், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, பொட்ட யம்பாளையம், பொட்டிநாயக்கனுர், சோமவாரம்பட்டி, பெதப்பம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிச்சேரி, சின்ன வீரம்பட்டி, சங்கர்நகர், காந்திநகர்-2, ஜிவா நகர், அரசு கலைக்  கல்லூரி, போடிபட்டி,  பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, மற்றும் குறிச்சிக்கோட்டை  ஆகிய பகுதிகளில் வியாழனன்று  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம்  தடைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் சீரமைக்கப்படாத சாலை பொது மக்கள் சாலை மறியல்

திருப்பூர், ஜூலை 31 - திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் கண் டியன் கோவில் ஊராட்சியில் பழுதுபட்ட 10க்கும் மேற்பட்ட  சாலைகள் கடந்த 10 ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்ப டாமல் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக ளுக்கு பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை. எனவே சாலை அமைக்க உரிய நடவடிக்கை  எடுக்கக் கோரி செவ்வாயன்று காலை அவினாசிபாளையத்தில் இருந்து காங்கேயம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கரு ணைபாளையம் பிரிவில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் 400-க்கும் மேற் பட்ட மக்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். சம்பந்தப்பட்ட  துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விரைவாக  சாலை அமைத்து தருவதாக உத்தரவாத கடிதம் வழங்கினர். இதையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இப்போ ராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலளர் கே.எம்.இசாக், துணைச் செயலாளர்கள் எம். மோகன் ஜி.ரவி பொங்கலுர் ஒன்றியச் செயலாளர் கே.தங்க வேல் துணைச்செயலாளர் எஸ்.தெய்வசிகாமணி, ஒன்றி யக் கவுன்சிலர் ஈ.ஜோதிபாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆத்துப்பாளையத்தில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலம்

திருப்பூர், ஜூலை 31 - 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகிப்பதால்,  விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆத்துப்பாளையம் பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 10ஆவது வார்டு ஆத்துப்பாளையம் பகுதியில் காமாட்சி  அம்மன் கோவில் வீதி, பாரதி நகர், அம்பேத்கர் நகர், ஜெய்ந கர், அண்ணா நகர், திருவள்ளுவர் நகர், ஏடி காலனி, சக்தி  நகர், எஸ்.பி.கே.கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் 70க்கும்  மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், இப்பகுதிகளுக்கு  8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிதண்ணீர் விநியோ கிக்கப்படுகிறது. இதனால் போதுமான குடிநீரின்றி பொதுமக் கள் சிரமப்படுகின்றனர். மேலும், மாதம் ரூ.700 கொடுத்து  தண்ணீர் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  முறையாக குடிநீர் விநியோகிக்க மாநகராட்சி அதிகாரிகளி டம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாரத்திற்கு இருமுறை குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இப்பகுதி மக்கள் தெரி வித்தனர்.

பச்சாம்பாளையத்தில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து சிபிஎம் பிரச்சாரம்

அவிநாசி, ஜூலை.31 அவிநாசி அருகே பச்சாம்பாளையத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர்  செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான 3 குற்றவியல் சட்டங் களை திரும்பப் பெறவும், தமிழக மக்களை வஞ்சிக்கும் ஒன் றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், தொழி லாளர் விரோத, தொழிலாளர்களை பாதிக்கும் சட்டங்களை  கைவிடவும், மின் கட்டண உயர்வை திரும்ப பெறவும், போதை  கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ரேஷன் கடைக ளுக்கு பாமாயில், பருப்பு, கோதுமை, மண்ணெண்ணை ஆகி யவற்றை தடையின்றி வழங்கவும், ரேசன்கடைக்கு புதிய கட்டி டம் அமைத்து தரவும், அனைத்து பேருந்துகளும் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லவும், பச்சாம் பாளையம் பஸ் ஸ்டாப், தண்ணீர்பந்தல் பஸ் ஸ்டாப்க்கு  பேருந்து நிழற்குடை அமைத்து தரவும், மயானத்திற்கு தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தரவும், அனைத்து பகுதிகளிலும் தெரு நாய் தொந்தரவு மிகவும் அதிகமாக உள்ளதைக் கட்டுப்ப டுத்தவும் கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பச்சாம்பாளையம் கிளை சார்பில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  சென்னியப்பன் தலைமை ஏற்றார். கோரிக்கைகளை விளக்கி கிளைச் செயலா ளர் பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, நகர்மன்ற  உறுப்பினர் சுப்பிரமணியம், ஒன்றியச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி உள்ளிட்டோர் பேசினர். ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் பழனிசாமி, வையாபுரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள ஈமக்காரியத் தொகையை விரைந்து வழங்க சிபிஎம் கவுன்சிலர் கோரிக்கை

அவிநாசி, ஜூலை 31- பட்டியலின மக்களுக்கு இரண்டு  வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட் டுள்ள ஈமக்காரியத் தொகையை உட னடியாக கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர்மன்றக் கூட் டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் வலியுறுத்தினார். திருமுருகன்பூண்டி நகரமன்ற கூட் டம் நகரமன்றத் தலைவர் குமார் தலை மையிலும், ஆணையர் கனிராஜ் முன்னி லையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நகர்மன்ற உறுப்பினர் சுப்பி ரமணியம் பேசுகையில், திருமுருகன் பூண்டி முருகன் கோவில் அமைந்துள்ள கழிப்பறை பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து  வருகிறது. இதற்கு நகராட்சி நிர்வாகம்  சார்பில் நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள் ளது. ஆனால் இந்து சமய அறநிலைத் துறை ஒப்புதல் வழங்காமல் காத்துக்கி டக்கும் நிலை உருவாகியுள்ளது உட னடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்த  வேண்டும். நல்லாற்றை தூய்மைப்ப டுத்த நகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி பொதுப்பணித்துறைக்கு அனுப்ப வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும், விபத்துகள் அதிகமாக நடைபெறுகிற காரணமாக திருப்பூர் செல்லும் சாலையில் அமைந் துள்ள டாஸ்மார்க் கடையை வேறு  இடத்திற்கு மாற்றம் செய்ய வேண் டும்.  திருப்பூர் மாநகராட்சி உடன் திரு முருகன்பூண்டி நகராட்சியை இணைக்க கூடாது என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகர மன்ற  உறுப்பினர் தேவராஜன் பேசுகையில் எனது வார்டு பகுதியில் சாக்கடை மற் றும், சாலை வசதி அமைக்கப்படாமல் இருந்து வருகிறது, உடனடியாக அமைத்து தர ஏற்பாடு செய்ய வேண் டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஈமக்கா ரிய தொகையாக அரசாங்கம் தரப்பி லிருந்து ஐயாயிரம் வழங்கப்பட்டிருந் தது. தற்பொழுது இரண்டு வருடங்க ளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக கொடுக்க வேண் டும். நகராட்சி முழுவதும் சோலார் லைட் டுகள் அமைக்கப்பட்டது பல்வேறு இடங்களில் எரியாமல் இருந்து வருகி றது இதனை சீரமைத்து தர வேண்டும். அதேபோல தேர்தல் நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது 2000  ரூபாய் டெபாசிட் தொகை கட்டப்பட்டது  தற்பொழுது வரை திருப்பி செலுத் தாமல் இருந்து வருகிறது உடனடியாக நகராட்சி நிர்வாகம் கொடுக்க வேண் டும் என தெரிவித்தார். இதையடுத்து திமுகவைச் சேர்ந்த  நகர மன்ற உறுப்பினர் பாரதி பேசுகை யில் எனது வார்டு பகுதிகளில் கோவில்  முன்பாக தரைமட்ட பாலம் பெரிய குழி  ஏற்பட்டு பள்ளி வேன்களும், குழந்தைக ளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை சீரமைத்து தர ஆறு மாதங்க ளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தேன் இதுவரையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆடி  மாதம் கோவிலுக்கு பக்தர்கள் அதிக ரித்த வண்ணம் உள்ளனர். இதனால் அச் சத்துடன் வருகிறார்கள். உடனடியாக  இக்குறையை தீர்க்க வேண்டும் என  தெரிவித்தபோது, அதிகாரிகள் அலட்சி யமாக பதில் தெரிவித்ததால் வெளிநடப் பில் ஈடுபட்டார், அதேபோல பொதுமக் கள் பயன்பாட்டிற்காக பொதுக்குழாய்  ஏற்படுத்தித் தருமாறு தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை, உடனடி யாக ஏற்படுத்தி தர வேண்டும் என்றும்  அவர் தெரிவித்தார்.

முதியோர்கள் தனியாக வசிக்கும் பகுதிகளில் ரோந்து பணியில் போலீசார்: ஐ.ஜி. பேட்டி

முதியோர்கள் தனியாக வசிக்கும் பகுதிகளில் ரோந்து பணியில் போலீசார்: ஐ.ஜி. பேட்டி ஈரோடு, ஜூலை 31- மேற்கு மண்டலத்தில் தனியாக முதியவர்கள் வசிக் கும் வீடுகள் உள்ள பகுதிகளில், காவல் துறையினர் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள் ளதாக மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் கே. பவானீஸ்வரி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் செவ்வாயன்று அவர் செய்தியாளர்களிடம் பேசு கையில், ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அறச்சலூர், திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் கடந்த  2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை தனியாக வசித்த முதி யவர்களைக் குறிவைத்து 5 ஆதாயக் கொலைகள் நடந் துள்ளன. இந்த சம்பவங்களில் 70.75 பவுன் நகை மற்றும்  ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த  ஆதாயக் கொலை வழக்குகளில் ஈடுபட்டவர்களை பிடிக்க கோவை சரக காவல் துறை துணைத்தலை வர் சரவணசுந்தர், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஜி.ஜவகர், பெருந்துறை துணை காவல் கண் காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோரது தலை மையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நீல கிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள எருமாடு பகுதி யைச் சேர்ந்த சின்ராஜ் (42) என்பவர் தலைமையிலான 12  பேர் கும்பல் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைய டுத்து சின்ராஜ், அதேபகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, வீர மணி, கண்ணன், நாகராஜ் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த  முருகன், கேசவன், காளிமுத்து, தஞ்சாவூரைச் சேர்ந்த இளையராஜா, திருப்பூரைச் சேர்ந்த சங்கர்,  விசு (எ) சொக்கநாதன் ஆகிய 11 பேரைக் கைது செய்து, 46 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்துள்ளோம். தலை மறைவான ஒருவரைத் தேடி வருகிறோம். இக்கும்பல் தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைத்தும், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத பகு திகளில் உள்ள தனி வீடுகளில் புகுந்து, அவர்களைத் தாக்கி கொலை செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட் டுள்ளனர். இதுபோன்ற ஆதாயக் கொலை சம்பவங்கள்  மீண்டும் நடைபெறாமல் தடுக்க மேற்கு மண்டலம் முழுக்க பண்ணை வீடு போன்ற இடங்களில் தனியாக வசிக்கும் முதியவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டதில் 6,903 வீடுகளில் மூத்த குடிமக்கள் தனியாக வசிப்பது  கண்டறியப்பட்டது. அவர்களது வீடுகள் இருக்கும் பகுதி யில் காவல் துறையினர் தொடர்ந்து ரோந்து சென்று வரு கின்றனர். மேலும், தனியாக வசிப்பவர்களிடம் அப்ப குதி காவல் துறையினரின் கைப்பேசி எண்ணும் வழங்கி,  ஏதேனும் ஆபத்து என்றால் தொடர்பு கொள்ள அறிவு றுத்தியுள்ளதுடன், கண்காணித்தும் வருகிறோம், என் றார்.

ரூ.300 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு

ரூ.300 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு கோவை, ஜூலை 31- கருமத்தம்பட்டியில் ஆக்கிரமிப்பில் இருந்த கரிய மாணிக்க பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான 16 ஏக்கர் நிலத்தை அறநிலை யத்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். கோவை மாவட்டம், சூலூர் அடுத்த  கருமத்தம்பட்டி யில் நூற்றாண்டு பழமையான கரிய மாணிக்க பெரு மாள் கோவில் உள்ளது. கருமத்தம்பட்டி மற்றும் அதன்  சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கோயிலுக்கு சொந்த மாக ஏராளமான நிலங்கள் உள்ளன. அந்த வகையில் கருமத்தம்பட்டி அவிநாசி சாலையில் உள்ள 16.30  ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்வதற்காக குத்தகைக்கு  எடுத்தவர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இந்த நிலத்தை புதனன்று வருவாய் துறை உதவியு டன் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். தொடர்ந்து நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அள வீடு செய்த அதிகாரிகள்,  இந்த நிலம் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள கரியமாணிக்க பெருமாள் திருக் கோவிலுக்கு சொந்தமானது என்றும் அந்நியர்கள் அத்து மீறி இந்த நிலப்பரப்பில் நுழைந்தால் சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் வாசகங்கள் அடங்கிய பொது அறிவிப்பு பலகைகளையும் நட்டு வைத்தனர். இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 300 கோடியாக மதிப்பிடப் பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, கோவில் நிலம் ஆக்கி ரமிக்கப்பட்டு வந்த நிலையில், பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தொடர்ந்த கோரிக்கையை ஏற்று, இந்து அறநிலையத்துறை இந்த நடவடிக்கையை மேற் கொண்டுள்ளது. இந்த மீட்பு நடவடிக்கை, கோவிலின் நிதி நிலை மையை மேம்படுத்தி, கோவில் வளர்ச்சி பணிகளுக்கு  உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது  போன்ற ஆக்கிரமிப்புகளை தடுக்கும் விஷயத்தில்  ஒரு முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வும் பார்க்கப்படுகிறது.

மழையால் நீலகிரி அணைகளில் 70 சதவீதம் நீர் இருப்பு

உதகை, ஜூலை 31– நீலகிரில் பரவலாக பெய்த பருவம ழைக்கு அணைகளில், 70 சதவீதம் தண் ணீர் இருப்பில் உள்ளது. நீலகிரி மாவட்டம், குந்தா நீர் மின் வட்டத் திற்கு உட்பட்ட அவலாஞ்சி, எமரால்டு அணைகளுக்கு போர்த்திஹாடா நீர் பிடிப்பு  முக்கிய நீராதாரமாக உள்ளது. கடந்தாண் டில் பருவமழை பொய்த்ததால் இங்குள்ள, 13  அணைகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட தடுப் பணைகள் தண்ணீரின்றி படிப்படியாக குறைந்தது. நடப்பாண்டிலும், ஜூன் இறுதி  வரை மழை பெய்யாததால் பெரும்பாலான  அணைகளின் நீர் மட்டம் அதல பாதாளத் திற்கு சென்றது. அணைகளில் போதிய அள வில் தண்ணீர் இல்லாததால் மின் உற்பத்தி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும்,  அப்பர்பவானி, எமரால்டு, பைக்காரா அணை களை நம்பியுள்ள கூட்டு குடிநீர் திட்டத் திற்கு குடிநீர் விநியோகிக்க முடியாமல் போனதால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டது. இந்நிலையில், தென் மேற்கு பருவமழை  தாமதமாக கடந்த ஜூலை 4 ஆம் தேதியன்று துவங்கி தற்போது வரை பரவலாக மழை பெய்த வரும் நிலையில், கடந்த இரு வாரங் களாக பலத்த காற்றுடன் கன மழை பெய் தது. நீரோடைகளில் தண்ணீர் வரத்து படிப் படியாக அதிகரித்தது. அணைகளுக்கு, அதி கபட்சம் வினாடிக்கு, 400 கனஅடி தண்ணீர்  வரத்து வந்து கொண்டிருந்தது. தற்போது, மழை குறைந்தாலும், வினாடிக்கு, 200  கனஅடி வீதம் நீர் வரத்து வந்துகொண்டி ருக்கிறது. இரு வாரங்களில்  அப்பர்பவானி யில், 80 செ.மீ, அவலாஞ்சி, எமரால்டில், 105  செ.மீ, பைக்காரா 90 செ.மீ மழை பெய்துள் ளது. அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித் துள்ளதால் தற்போது, குந்தா, பைக்காரா நீர்  மின் திட்ட அணைகளில் 70 சதவீதம் நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மின்வாரிய ஊழியர் பலி: இழப்பீடு கேட்டு போராட்டம்

ஈரோடு, ஜூலை 31- மின்தடையை சரி செய்ய முயன்ற மின்வா ரிய ஊழியர் மின்சாரம் பாய்ந்து உயிரி ழந்த நிலையில், சடலத்தை வாங்க மறுத்து  உறவினர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த சாலைப்புதூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக சேலம், பள் ளிப்பட்டியைச் சேர்ந்த பாரதி (32) என்பவர்  பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி  ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலை யில், ஒத்தக்கடை பகுதியில் ஏற்பட்ட மின்த டையை சரி செய்ய மின்வாரிய அலுவலகத் தில் உள்ள அதிகாரிகள் ஒயர்மெனுக்கு பதி லாக கேங்மென் பாரதியை திங்களன்று இரவு  அனுப்பி வைத்துள்ளனர். அவர் மின்கம்பத் தில் ஏறி மின்தடையை சரி செய்ய முயன்ற போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அருகிலிருந்தவர்கள் பாரதியை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து கொடுமுடி காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இச்சம்ப வம் தொடர்பாக உயரதிகாரிகள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உயிரி ழந்த பாரதியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்  இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு  வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யும் போராட்டம் நடைபெற்றது. கொடுமுடி அரசு மருத்துவமனை முன்பு பாரதியின் சட லத்தை வாங்க மறுத்து, உறவினர்கள் மற்றும்  மின்வாரிய ஊழியர்கள் திரளானோர் செவ் வாயன்று மாலை வரை போராட்டத்தில் ஈடு பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த் தையைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு சடலத்தைப் பெற்றுக்கொண்டனர்.

அபாயகரமான மரங்கள் அகற்றும் பணி

உதகை, ஜூலை 31– உதகையில் உள்ள ஆபத்தான மரங்களை பவர் ஷா உதவியுடன் அகற் றப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகை, குன் னூர், குந்தா, கோத்தகிரி, கூடலுார் மற் றும் பந்தலுார் உள்ளிட்ட தாலுகாக்க ளில் நுாறாண்டு பழமை வாய்ந்த ஏராள மான கற்பூர மரங்கள் உள்ளன. குடியி ருப்பு, பள்ளி, அரசு அலுவலகங்கள், சாலையோரங்களில் பெரிய அளவி லான கற்பூர மரங்கள் அபாயகரமாக உள்ளது. பருவமழை சமயங்களில் பலத்த காற்றுக்கு மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், அரசு கட்டடங்கள், வீடுகள் சேதமாகி வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங் களாக பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு மாவட்ட முழுவதும், 250 க்கு மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளது. மாவட்ட முழுவதும் பல இடங்களில் இன்னும் ஏராளமான மரங்கள் விழுந்து விடும் நிலையில் உள்ளது. இது போன்ற மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சில பகுதிகளில் மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, உதகையில் உள்ள பூங்கா சாலை, தமி ழக சாலை, பிங்கர்போஸ்ட் பகுதிகளில்  உள்ள மரங்களை பவர் ஷா உதவியு டன் அகற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில், நீலகிரியை பொறுத்த வரை நுாறாண்டு பழமையான கற்பூரம் மரங் கள் தான் எங்கு பார்த்தாலும் உள்ளது.  இது போன்ற அன்னிய மரங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பொதுமக் கள் தரும் மனுக்களை உடனடியாக பரி சீலித்து அவ்வகை அபாயத்தான மரங் களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.

பவானிசாகர் அணையை பார்வையிட தடை

பவானிசாகர் அணையை பார்வையிட தடை ஈரோடு, ஜூலை 31- பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் சென்று பார் வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகு தியை ஆண்டுதோறும் ஆடி 18 ஆம் தேதி மட்டும் பொது மக்கள் பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாளில் பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் சென்று பொதுமக்கள் பார்வையிட்டு உற்சாகமாக பொழுதை  கழிப்பார்கள். ஈரோடு மட்டுமின்றி கோவை, திருப்பூர், நாமக் கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்து  பவானிசாகர் அணை மீது சென்று, அணை நீர்த்தேக்க பகு தியை பார்வையிடுவார்கள். மற்ற நாட்களில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை. இந்நிலையில், கொரோனா  பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல்  2022 ஆம் ஆண்டு வரை பவானிசாகர் அணை மேல் பகு திக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த  ஆண்டும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக பொதுமக்கள் அணை யின் மேல் பகுதிக்கு செல்லவில்லை. நடப்பாண்டில் ஆடிப் பெருக்கு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொண்டாடப்பட உள் ளது. இந்த ஆண்டு நிச்சயமாக பவானிசாகர் அணை மேல்  பகுதிக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த ஆண்டும் பவானிசாகர் அணை  மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். 5 ஆவது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்று லாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பவானிசாகர் அணை உதவி பொறியாளர் தமிழ் பாரத் கூறுகையில், பவானிசாகர் அணை நீர்மட்டம் தற் போது 91 அடிக்கும் மேல் உள்ளது. இதனால் அணை பாது காப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது. இதன்  காரணமாகவே இந்த ஆண்டும் பவானிசாகர் அணையின் நீர்  தேக்கப்பகுதியை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப் பட்டுள்ளது. அதே சமயம், ஆடிப்பெருக்கு நாளில் பவானிசா கர் பூங்கா வழக்கம் போல் திறந்திருக்கும், என்றார்.

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் உதகை, ஜூலை 31- உதகை மருத்துவமனை சாலையில் இருபுறங்களிலும் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள் ளது. நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு நாள்தோறும், ஏராளமான பொதுமக் கள் மருத்துவ பரிசோதனைக்கு வருகின்றனர். பலர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத் துவக்கல்லுாரி அந்தஸ்து என்பதால் மருத்துவ மாணவர்க ளும் தினமும் பயிற்சிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலை யில், மருத்துவமனைக்கு எதிரே உள்ள மருத்துவமனை சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இத னால், வாகனங்களால் நோயாளிகள், மருத்துவமனை ஊழி யர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. குறிப்பாக, வாகனங்கள் தாறுமாறாக  நிறுத்தப்படுவதால் அவசர தேவைக்கு வரும் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இச்சாலை யில் நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்களை போலீசார் அபராதம் விதித்து எச்சரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

ராஜஸ்தான் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

ராஜஸ்தான் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு சேலம், ஜூலை 31- கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு இயக் கப்படும் வாராந்திர ரயில் சேவை செப்டம்பர் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை - பகத் கி கோட்டி  சிறப்பு ரயில் சேவை ஜூலை மாதத்துடன் நிறைவு பெற  இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் மாதம் வரை நீட் டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் இருந்து ஆகஸ்ட்  1 முதல் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்குப் புறப்படும் கோவை - பகத் கி கோட்டி வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்:06181) சனிக்கிழமைகளில் காலை 11.30 மணிக்கு பகத் கி கோட்டி நிலையத்தைச் சென்ற டையும். மறுமார்க்கமாக, பகத் கி கோட்டி நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 29 ஆம் தேதி வரை  ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்குப் புறப்படும் பகத் கி கோட்டி - கோவை வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06182)  புதன்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு கோவை நிலை யத்தை சென்றடையும். இந்த ரயிலானது, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, கூட்டி, காச்சிகுடா, நிஜாமாபாத், வாஷிம், அகோலா, சூரத், அகமதாபாத் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் விடுமுறைக்கு கட்டுப்பாடு

தீயணைப்பு வீரர்கள் விடுமுறைக்கு கட்டுப்பாடு ஈரோடு, ஜூலை 31- காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதால், ஈரோடு மாவட்ட தீயணைப்பு வீரர்கள் விடு முறை எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப் பட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றின் கரையோ ரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகு திக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்காரணமாக ஈரோடு மாவட்ட தீயணைப்பு துறை வீரர்கள் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். இதில், காவிரி கரையோரம் உள்ள அந்தியூர், பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்பு பணி மேற்கொள்ளும் வகையில், 24  மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். காவிரியில் வெள்ள அபாய அச்சம் நீங்கும் வரை அத்தியாவசியத்தை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுமுறை எடுக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதே போல், மாவட்டத்தில் பிற பகுதிகளில் உள்ள தீயணைப்பு  வீரர்கள் அனைவரும் உஷாராக இருக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

சேலம், ஜூலை 31- வாழப்பாடி பகுதிக்குட்பட்ட கிரா மங்களில் கூடுதல் விலை கிடைப்பதால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்ற னர். சேலம் மாவட்டம், வாழப்பாடியில் நீர்பாசன திட்டங்கள் இல்லாத நிலையி லும், கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு களை அமைத்து ஆண்டு முழுவதும் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர்.  தற்போது சின்ன வெங்காயத்திற்கு தட் டுப்பாடு ஏற்பட்டு ஒரு கிலோ ரூ.50க்கு மேல் விற்பனையாகிறது. இதனால், வாழப்பாடி பகுதி விவசாயிகள் சின்ன  வெங்காயம் பயிரிடுவதில் அதிக ஆர் வம் காட்டி வருகின்றனர். வாழப்பாடி யில் முத்தம்பட்டி, செக்கடிப்பட்டி, இடையப்பட்டி, சிங்கிபுரம், பழனியா புரம், முத்தம்பட்டி, சேசன்சாவடி, விலா ரிபாளையம், சோமம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஏறக்குறைய 200 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிட் டுள்ளனர். தனியாக பாத்தி அமைத்தும்,  மஞ்சள் தோட்டத்திற்குள் ஊடு பயிராக வும் பயிரிட்டு பராமரித்து வருகின்ற னர்.  இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த  விவசாயிகள் கூறுகையில், தற்போது சின்ன வெங்காயத்தின் தேவை அதிக ரித்து தட்டுப்பாடு ஏற்படுகிறது. பெரும் பாலான மாதங்களில் கூடுதல் விலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி, சின்ன வெங்காயத்தை ஒரு மாதம் வரை இருப்பு வைத்திருக்க முடியும். எனவே,  நீர்பாசன வசதி கொண்ட விவசாயி கள் குறுகியகால பயிரான சின்ன வெங்காயத்தை தற்போது பயிரிட்டுள் ளனர், என்றனர்.

தமிழகத்தில்தான் அதிக விபத்துகள் நடைபெறுகிறது!

சேலம், ஜூலை 31- இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக விபத்துகள் நடைபெறு கிறது, என சேலத்தில் நடைபெற்ற செய் தியாளர் சந்திப்பில், இந்திய மற்றும் தமிழ் நாடு எலும்பு மூட்டு அறுவை சங்க மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர் கூறுகையில், பொதுமக் களுக்கு வாகன விபத்துக்கள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தேசிய எலும்பு மூட்டு தினமாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் மது போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற் படும் தீமைகள் குறித்து பல்வேறு நிகழ்ச் சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. குறிப்பாக ஆகஸ்ட் 1ஆம் தேதி  முதல் 7ஆம் தேதி வரை எலும்பு மூட்டு  வாரமாக நிகழ்ச்சிகள் நடத்த உள் ளோம். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 4  லட்சத்து 62,312 வாகன விபத்துக்கள் நடைபெறுகிறது. அதில் ஒரு லட்சத்து 68,91 பேர் இறக்கின்றனர். அதிக விபத் துகள் ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இறப்பு அதிகம் உள்ள மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது.  விபத்தில் சிக்கி உயிருக்கு போராடு பவர்களை காப்பாற்றும் உயிர் காக்கும்  முதலுதவி பயிற்சியை கல்லூரி மாண வர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும்  அளிக்க உள்ளோம். மேலும், நான்காம் தேதி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட பந்தயம் நடத்த உள்ளதாகவும் சங்கத் தின் செயலாளர் கே.மோகனசுந்தரம் தெரிவித்தார். இதில் இந்திய மற்றும் தமிழ்நாடு எலும்பு மூட்டு அறுவை சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.