districts

img

பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் கட்டிய வீடுகளுக்கு நிதி ஒதுக்காமல் உள்ளது ஏன்?

நாமக்கல், மார்ச் 16- முள்ளுகுறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி யில், அபராத வட்டி செலுத்த சொல்லி கட்டாயப் படுத்துவதை கைவிட வேண் டும் என தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தி னர் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக அரசின் விவ சாய கடன் தள்ளுபடி அறி விப்பின் அடிப்படையில், கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். 5 பவுனுக்கு கீழ் உள்ளவர் ளுக்கு கடன் தள்ளுபடி மறுத்து, அபராத வட்டி செலுத்த கட்டாயப்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், முள்ளுகுறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மற் றும் மலைவாழ் மக்கள் லேம்ப் சொசைட்டி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மலைவாழ் மக்கள் சங்க  ஒன்றியச் செயலாளர் ஏ.பழனிசாமி தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.சின்னுசாமி, தமிழ் ்நாடு விவாசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் பி.பெருமாள், இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.