கோவை, டிச.2- மார்க்சிஸ்ட் கட்சியின் அன் னூர் ஒன்றியக் குழு செயலாள ராக எஸ்.மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் கோவை மாவட்டம், அன் னூர் ஒன்றியக் குழுவின் 6 ஆவது மாநாடு அன்னூரில் உள்ள யு.ஜி. மஹாலில் தோழர் சீதாராம் யெச் சூரி நினைவரங்கில் ஞாயிறன்று நடைபெற் றது. முன்னதாக அன்னூர் நகர வீதிகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி மேளதாளங் கள் முழங்க பேரணி நடத்தப்பட்டது. இம்நாட் டின், துவக்கத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் முகமது முசீர் செங்கொடியை ஏற்றி வைத் தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கபீர், மகேந் திரன், அர்ஜுனன் ஆகியோர் தலைமை வகித் தனர். ஒன்றியக் குழு நிர்வாகி சரவணன் வரவேற்புரையற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி துவக் கவுரையாற்றினார். ஒன்றியக் குழு செயலா ளர் எஸ். மணிகண்டன் வேலை அறிக்கையும், ஒன்றியக் குழு நிர்வாகி அகமது கபீர் வரவு செலவு அறிக்கையும் முன் வைத்தனர். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கோபால் மாநாட்டை வாழ்த்தி பேசினார். இம்மாநாட்டில், அன்னூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மேம் பாலம் அல்லது புதிய சாலை அமைக்க வேண்டும். அன்னூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி படுக்கைகளின் எண்ணிக்கையை 100 ஆக அதிக ரித்து, உள்கட்டமைப்பை மேம்ப டுத்த வேண்டும். அன்னூர் பகு தியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும். விவசாய நிலங்களில் தொழிற் சாலைகளை அமைக்கக் கூடாது. வாகன ஓட் டுநர் உரிமம் பெற அன்னூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்க வேண்டும். இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டும். கிராமப் புற பள்ளி மாணவர்களுக்கான போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. இதனை தொடர்ந்து, அன்னூர் ஒன்றியக் குழு செயலாளராக எஸ். மணிகண்டன் மற் றும் 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு உறுப்பினர் கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் மனோகரன் நிறைவுரை யாற்றினார். முடிவில், ஒன்றியக் குழு உறுப்பி னர் சுகுமார் நன்றி கூறினார்.