districts

img

உடுமலை ஒன்றியக்குழு செயலாளராக எஸ்.ஜெகதீசன் தேர்வு

உடுமலை, அக்.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியக் கமிட்டியின்  24 ஆவது மாநாட்டில் ஒன்றியக்குழு செய லாளராக எஸ் . ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட உடுமலை ஒன்றிய மாநாடு தோழர் சீத்தாரம் யெச்சூரி, தோழர் என்.சங்கரய்யா நினைவரங்கத் தில் (வி.பி.எஸ். திருமண மண்டபம்) ஞாயிறன்று நடைபெற்றது.   ஒன்றியக்குழு உறுப்பினர் பால தண்டபாணி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகவேல்  செங்கொடி ஏற்றி வைத் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் மாநாட்டை  தொடங்கி வைத்து பேசினார். ஒன்றியக்குழு செய லாளர் கனகராஜ் அறிக்கையை முன் வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் எஸ். சுப்பிரமணிம் வாழ்த்தி பேசி னார். இந்த மாநாட்டில் பத்து தோழர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள் மேலும் எஸ்.ஜெகதீசன் ஒன்றியக்குழு செய லாளராக தேர்வு செய்யப்பட்டார்.  முன்னதாக, இம்மாநாட்டில் ஊரக வேலை திட்டத்தை விவசாயப் பணிக ளுக்கும் பயன்படுத்த வேண்டும். இந்த திட்டத்தில் 200 நாட்கள் வேலையும் ரூ 600 சம்பளம் தர வேண்டும். உணவு பொருள்கள் மீதான ஒன்றிய அரசின் ஜீஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண் டும். திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு தரப்படும் குடிநீர் குழாய்கள் பராமரிப்பு மற்றும் குடிநீர் விநியோ கத்தை மீண்டும் குடிநீர் வடிகால் வாரியமே ஏற்று நடத்த வேண்டும். பிஎபி திட்டம் முழுமையான திட்டமாக மாற்ற நல்லாறு அணையை கட்ட வேண்டும். திருமூர்த்தி அணையில் இருந்து கடை மடை வரை பாசனத் திற்கு செல்லும் வாய்கால்களை சீர மைக்க வேண்டும். வன விலங்குகளால் சேதப்படும் பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும். காட்டு பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். உடுமலை அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். ரேசன் கடைகளில் தேங் காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.  மாநாட்டில் புதிதாக தேர்வு செய்யப் பட்ட  ஒன்றியக்குழு செயலாளர் மற்றும்  ஒன்றியக்குழு உறுப்பினர் களை அறிமுகம் செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குமார் நிறைவுரை யாற்றினார். முடிவில், முருகன் நன்றி கூறினார். மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மா னங்களை விளக்கி எரிசனம்பட்டி என். சங்கரய்யா நினைவு திடலில் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜகோபால் தலை மையில் நடைபெற்ற பொது கூட்டத் தில்  திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பி னர் கே. சச்சிதானந்தம் சிறப்புரையாற் றினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர். குமார், கே. ரங்கராஜ் மற் றும் எஸ். சுப்பிரமணியம் , மாவட்டக் குழு உறுப்பினர் கனகராஜ், ஒன்றியச் செயலாளர் எஸ். ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.