districts

img

உள்ளாட்சி பணிகளில் அவுட்சோர்சிங் முறையை கைவிடுக

சேலம், மார்ச் 24- மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பணி களில் அவுட்சோர்சிங் முறையை கைவிட  வேண்டும் என வலியுறுத்தி சேலம் நாட் டாமை கழக கட்டடம் முன்பிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் வரை சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் பேரணி மற் றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் அவுட்சோர்சிங் முறையை தமிழ்நாடு அரசு கடைபிடித்து  வருகிறது. இதனால் ஊழியர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்படும். எனவே, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அவுட்சோர் சிங் முறையை கடைபிடிக்கக்கூடாது. அவுட் சோர்சிங் முறையை ஊக்கப்படுத்தும் அர சாணைகளை ரத்து செய்ய வேண்டும். மாதந் தோறும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதி யத்தை வழங்க வேண்டும். பிஎப் பணத்தை முறையாக செலுத்த வேண்டும். பணி உபகர ணங்கள் வழங்க வேண்டும் என வலியு றுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் நாட்டாமை கழக கட்டடம் முன்பி லிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழை வாயில் வரை சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலா ளர் ஏ.கோவிந்தன், மாவட்ட தலைவர் டி.உதயகுமார், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தலைவர் எஸ்.கே. தியாகராஜன், சி.கருப்பண்ணன், ஆர்.வெங் கடபதி ஆகியோர் உரையாற்றினர். இப் போராட்டத்தில், ஏராளமான தொழிலாளர் கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.